IND vs AFG 3rd T20I Super Over: இரண்டு சூப்பர் ஓவர்! பயத்தை காட்டிய ஆப்கானிஸ்தானை வீழ்த்திய இந்தியா - நடந்தது என்ன?
IND vs AFG 3rd T20I Super Over: இரண்டு சூப்பர் ஓவர்கள், 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி, 3 விக்கெட்டுகள் எடுக்கப்பட்ட நிலையில் ஒரு வழியாக ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி மூன்றாவது டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.

சூப்பர் ஓவரில் ஆப்கானிஸ்தானை வீழ்த்திய மகிழ்ச்சியில் இந்திய வீரர்கள் (AFP)
பரபரப்பாக சென்ற இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான மூன்றாவது டி20 போட்டி, ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன் குலாத்தின் நயிப் அதிரடியால் டையில் முடிந்தது.
இதனால் வெற்றியாளர் யார் என்பதை தீர்மானிக்கும் விதமாக சூப்பர் ஓவர் நடந்தது. இதில் முதலில் ஆப்கானிஸ்தான் பேட் செய்தது. பேட்டிங்கில் நல்ல பார்மில் இருந்த குலாப்தின் நயிப், ரஹ்மனுல்லா குர்பாஸ் பேட்ஸ்மேன்களாக களமறங்கினார்கள். இந்தியா பவுலர்களில் முகேஷ் குமார் சூப்பர் ஓவரை வீசினார்.
இதைத்தொடர்ந்து முதல் பந்தில் முகேஷ் குமார் யார்க்கர் வீச, அதை லாங் ஆன் திசையில் அடித்தார் குலாப்தின். இரண்டாவது ரன் ஓடும் முயற்சியில், கோலியின் அற்புத த்ரோவால் ரன் அவுட்டனார்.
