IND vs SL 1st T20: ஜெய்ஸ்வால், கில் அதிரடி தொடக்கம், சூர்யகுமார் 360 ஆட்டம், பண்ட் பினிஷ் - இந்திய அணி மிக பெரிய இலக்கு
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Ind Vs Sl 1st T20: ஜெய்ஸ்வால், கில் அதிரடி தொடக்கம், சூர்யகுமார் 360 ஆட்டம், பண்ட் பினிஷ் - இந்திய அணி மிக பெரிய இலக்கு

IND vs SL 1st T20: ஜெய்ஸ்வால், கில் அதிரடி தொடக்கம், சூர்யகுமார் 360 ஆட்டம், பண்ட் பினிஷ் - இந்திய அணி மிக பெரிய இலக்கு

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published Jul 27, 2024 08:55 PM IST

Google Trending: டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களால் இந்திய அணி மிக பெரிய ஸ்கோரை எடுத்துள்ளது. ஓபனிங் பேட்ஸ்மேன்கள் ஜெய்ஸ்வால், கில் அதிரடியான தொடக்கம், சூர்யகுமார் தனது வழக்கமான 360 டிகிரி ஆட்டத்தை வெளிப்படுத்த, பண்ட் நல்ல பினிஷிங் கொடுத்தார்.

சூர்யகுமார் 360 ஆட்டம், பண்ட் பினிஷ், மிக பெரிய இலக்கு நிர்ணயித்த இந்திய அணி
சூர்யகுமார் 360 ஆட்டம், பண்ட் பினிஷ், மிக பெரிய இலக்கு நிர்ணயித்த இந்திய அணி (PTI)

இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி பல்லேகலேவில் நடைபெற்று வருகிறது. இந்திய டி20 அணியில் புதிய கேப்டனாக சூர்யகுமார் யாதவ், புதிய பயிற்சியாளரான கெளதம் கம்பீர் ஆகியோர் தங்களது பொறுப்புகளில் களமிறங்கும் முதல் போட்டியாக அமைந்துள்ளது.

இலங்கை பவுலிங்

இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் சரித் அசலங்கா பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் குவித்துள்ளது. அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 58, ரிஷப் பண்ட் 49, யஷஸ்வி ஜெயஸ்வால் 40, சுப்மன் கில் 34 ரன்கள் எடுத்தனர்.

டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி 214 ரன்கள் என்ற மிகப் பெரிய இலக்கை நிர்ணயித்துள்ளது.

இலங்கை பவுலர்களில் மதிஷா பதிரனா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். தில்சான் மதுஷங்கா, வனிந்து ஹசரங்கா, அசித பெர்ணாண்டோ ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.

அதிரடி தொடக்கம்

இந்திய அணியின் ஓபனர்களான யஷஸ்வி ஜெயஸ்வால் - சுப்மன் கில் ஆகியோர் நல்ல தொடக்கத்தை தந்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு பவர்ப்ளே முடிவதற்குள்ளாகவே, 5.6 ஓவரில் 74 ரன்கள் சேர்த்தனர்.

முதல் விக்கெட்டாக அவுட்டான கில் 16 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தார். கில் வெளியேறியபோதிலும் தொடர்ந்து அதிரடியை வெளிப்படுத்திய ஜெயஸ்வால் 21 பந்துகளில் 40 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

சூர்யகுமார் யாதவ் 360 டிகிரி ஆட்டம்

கேப்டனாக பொறுப்ப வகித்த முதல் போட்டியில் தனது வழக்கமான 360 ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் குவிப்பில் ஈடுபட்டார். நாலபுறமும் பவுண்டரிகளை அடித்து தள்ளிய சூர்யகுமார் அரைசதமடித்தார். 26 பந்துகளில் 58 ரன்கள் அடித்து பதிரனா பந்தில் அவுட்டானார்.

ட்ரெண்டிங்கில் இந்தியா-இலங்கை டி20 போட்டி

பண்ட் பினிஷ்

இவருக்கு அடுத்தபடியாக பேட் செய்ய வந்த ரிஷப் பண்ட், தொடக்கம் முதலே இலங்கை பந்துவீச்சாளர்களை வெளுத்து வாங்கினார். அனைத்து திசைகளிலும் பவுண்டரிகளை அடித்து துவம்சம் செய்த பண்ட் 49 ரன்கள் எடுத்து தரமான இன்னிங்ஸுடன் சிறப்பான பினிஷிங்கை கொடுத்தார்.

பதிரனா கலக்கல் பவுலிங்

இலங்கை பவுலர்களில் இளம் வேகப்பந்து வீச்சாளர் பதிரனா சிற்பபாக பவுலிங் செய்து அணிக்கு தேவைப்படும் திருப்புமுனையை தந்தார். முதல் 2 ஓவரில் 20 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் மட்டும் வீழ்த்தியிருந்தார். அடுத்த இரண்டு ஓவர்களில் மேலும் 20 ரன்கள் விட்டுக்கொடுத்த போதிலும் பண்ட், பாண்டியா, ரியான் பிராக் என மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து ஆட்டத்தின் முடிவில் 4 ஓவர்களில் 40 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி பவுலிங்கில் கலக்கினார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.