Fact Check: ஐபிஎல் போட்டியின் போது தாக்கப்பட்டாரா CSK ரசிகர்.. சமீபத்தில் நடைபெற்ற சம்பவமா? - உண்மை என்ன?
Fact Check: நடப்பு ஐபிஎல் போட்டியின் போது சிஎஸ்கே ரசிகர் ஒருவர் தாக்கப்பட்டதாக சமூகவலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதன் உண்மை தன்மை குறித்து பார்ப்போம்.

நடப்பு 2024 ஐபிஎல் போட்டியின் போது சென்னை சூப்பர் கிங்ஸ் ஆதரவாளரும் தோனியின் மிகப்பெரிய ரசிகருமான ஒருவர் தாக்கப்பட்டதாக சமூகவலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதன் உண்மைத் தன்மை குறித்து நியூஸ்மீட்டர் உண்மை சரிபார்ப்பு செய்தி நிறுவனம் ஆய்வுக்கு உட்படுத்தியது. இது குறித்து விரிவாக காணலாம்.
"கன்னடத்துகாரன் தமிழன், சென்னைகாரண அடிக்கிறான், இங்க கன்னடதான தலைவர், சூப்பர் ஸ்டார்னு சொல்லி ** *** இருக்கானுங்க வெக்கம் கெட்ட DVD பசங்க..த்து" என்ற கேப்ஷனுடன் சிஎஸ்கே ரசிகரை சிலர் தாக்கும் காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்தச் சம்பவம் தற்போது நடைபெற்றது போன்று பரப்பி வருகின்றனர்.
வைரலாகும் வீடியோ
சவுத்செக்கின் ஆய்வில் இச்சம்பவம் 2018 ஆம் ஆண்டு நடைபெற்றது என்பது தெரியவந்துள்ளது. இதன் உண்மைத்தன்மையை கண்டறிய வீடியோவின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் தேதி TOI plus என்ற Times of Indiaவின் பேஸ்புக் பக்கம், "தோனியின் தீவிர ரசிகர்களில் ஒருவரான சரவணன் ஹரி செவ்வாய்க்கிழமை சேப்பாக்கத்திற்கு வெளியே தாக்கப்பட்டார்." என்ற கேப்ஷனுடன் வைரலாகும் அதே வீடியோவை வெளியிட்டுள்ளது.
