Cricket : பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் பேச்சால் சர்ச்சை – உடனே பல்டியடித்து அறிக்கை
Cricket : பாகிஸ்தானின் கிரிக்கெட் வாரிய தலைவர் ஐகா அஷ்ரப். இவர் ஒரு பேட்டியில் இந்தியாவை எதிரி நாடு என்று குறிப்பிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Cricket : பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் பேச்சால் சர்ச்சை – உடனே பல்டியடித்து அறிக்கை
பாகிஸ்தானின் கிரிக்கெட் வாரிய தலைவர் ஐகா அஷ்ரப். இவர் ஒரு பேட்டியில் இந்தியாவை எதிரி நாடு என்று குறிப்பிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவை அவர் எதிரி நாடு என குறிப்பிட்டு பேசியதாக சர்ச்சை எழுந்தது. இதையடுத்து பல்வேறு தரப்பினரும் அவருக்கு கண்டனம் தெரிவித்தனர். உடனடியாக அவர் தனது நிலைப்பாட்டை மாற்றி, ‘இந்தியாவில் பாகிஸ்தான் அணியினருக்கு அளிக்கப்பட்ட அற்புதமான வரவேற்பு சிறப்பாக இருந்தது. இந்தியா-பாகிஸ்தான் அணியினர் களத்தில் மோதிக்கொள்ளும்போதெல்லாம், போட்டியாளர்களாக தங்களை வெளிப்படுத்துவார்களே தவிர எதிரிகளாக அல்ல என இந்திய வீரர்களை புகழ்ந்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
உலககோப்பை போட்டிகளில் நியுசிலாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தை பாகிஸ்தான் அணி இன்று ஹைதராபாத்தில் விளையாடுகிறது.