Agarkar on Ashwin: திடீரென அஸ்வினை சேர்க்கப்பட்டது ஏன்? தேர்வு குழு தலைவர் அகர்கர் பதில்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் அஸ்வினின் திறமை, அவர் எந்த இடத்தில் உள்ளார் என்பதை அறிந்து கொள்வதற்கான வாய்ப்பாக அமையும் என்று இந்திய அணி தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பை ஒரு நாள் தொடருக்கு முன்னதாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட் ஒரு நாள் தொடரில் இந்தியா விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் போட்டி செப்டம்பர் 22ஆம் தேதி மெஹாலியில் நடைபெறுகிறது.
இதையடுத்து இந்த தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. அதன்படி முதல் இரண்டு போட்டிகளுக்கு கேப்டன் ரோஹித் ஷர்மா, விராட் கோலி, குல்தீப் யாதவ், ஹர்திக் பாண்ட்யா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் முதல் இரண்டு போட்டிக்கான இந்திய அணி சர்ப்ரைசாக ஸ்பின் ஆல்ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் சேர்க்கப்பட்டுள்ளார். இதன்மூலம் 37 வயதாகும் அஸ்வின், 20 மாதங்களுக்கு பிறகு அவர் ஒரு நாள் போட்டியில் மீண்டும் கம்பேக் கொடுக்கிறார்.
அஸ்வின் அணியில் சேர்க்கப்பட்டது குறித்து இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் கூறியதாவது:
