Team India: கம்பீருக்கு துணையாக இணையும் முன்னாள் மும்பை இந்தியன்ஸ் வீரர்..பவுலிங் பயிற்சியாளர் குறித்து இறுதி முடிவு
இந்திய அணியின் உதவி பயிற்சியாளராக, தலைமை பயிற்சியாளர் கெளதம் கம்பீருக்கு துணையாக முன்னாள் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர்கள் இணையவுள்ளனர்.

இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கெளதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் எதிர்வரும் இலங்கைக்கு எதிரான சுற்றுப்பயணத்தில் தனது முதல் பயணத்தை தொடங்குகிறார். இந்த தொடரில் டி20, ஒரு நாள் தலா 3 போட்டிகளில் இந்தியா - இலங்கை அணிகள் மோதுகின்றன.
இந்த தொடருக்கான இந்திய அணி கடந்து இரு நாள்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. அதன்படி ஒரு நாள் அணிக்கு ரோஹித் ஷர்மா கேப்டனாகவும், டி20 அணிக்கு சூர்ய குமார் யாதவ் கேப்டனாகவும் செயல்படவுள்ளனர்.
இரண்டு இணை பயிற்சியாளர்கள்
இதையடுத்து இலங்கை சுற்றுப்பயணம் செல்ல இருக்கும் இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளர் கம்பீருடன் இணை பயிற்சியாளர்களாக முன்னாள் மும்பை இந்தியன்ஸ் வீரர் அபிஷேக் நாயர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடி நெதர்லாந்து வீரர் ரியான் டென் டோஸ்கேட் ஆகியோர் இணையவுள்ளனராம்.