Makaram Money Luck: ’மகரம் ராசி, அவிட்டம் நட்சத்திரத்திற்கு கோடீஸ்வர யோகம் எப்போது?’ ஏற்றி விட போகும் குரு, சனி, புதன்!
குரு, சனி, புதன் ஆகிய தசைகள் வருகின்றது. மகரம் ராசிக்கு 35 முதல் 60 வயது வரை உள்ள சனி தசையும், அதற்கு பின்னர் வரும் புதன் தசையும் மிகப்பெரிய வளர்ச்சியை தரக்கூடும்.

எந்த சந்தர்ப்பத்திலும் நல்லதே நினைப்போம், நல்லதே நடக்கும் என்று எண்ணிக்கொண்டு இருக்கும் மகரம் ராசிக்காரர்கள் கடினமாக உழைப்பதன் மூலம் வெற்றியை அடைவார்கள். அவர்கள் தங்கள் வாழ்க்கையில் முன்னேற ஆர்வமாக இருப்பார்கள். பொறுப்புடன் செயல்படும் இவர்களுக்கு பணியின் முக்கியத்துவம் மற்றும் நேர்த்தி பிரதானமான ஒன்றாக இருக்கும். அமைதியாகவும் திடமாகவும் இருப்பார்கள். மனதில் நினைத்ததை அடைவதற்கான சுயக்கட்டுப்பாட்டையும் இவர்கள் கொண்டு இருப்பார்கள்.
இது போன்ற போட்டோக்கள்
May 23, 2025 11:55 AMசனி பகவானுக்கு கடுகு எண்ணெய் ஏன் காணிக்கையாக செலுத்தப்படுகிறது.. இந்த பாரம்பரியக் கதையை தெரிஞ்சுக்கோங்க!
May 23, 2025 11:26 AMசூரிய பெயர்ச்சியால் ஜூன் 15 முதல் இந்த 5 ராசிக்காரர்களுக்கு நல்ல காலம் தொடங்கும் பாருங்க.. உங்களுக்கும் ஜாக்பாட்டா!
May 23, 2025 10:55 AMஎந்த 4 ராசிகளில் பிறந்த பெண்கள் தங்கள் காதலை வெளியில் சொல்ல தயங்குவார்கள் தெரியுமா.. காரணம் இதோ!
May 23, 2025 10:04 AMசனி எப்படி கொடுப்பார் தெரியுமா? .. கொட்டும் யோகத்தில் சிக்கிய ராசிகள்.. உங்க ராசி என்ன?
May 23, 2025 08:31 AMசனியின் இல்லத்தில் ராகு பிரவேசம்.. எந்த 4 ராசிகளுக்கு அபரிமித செல்வம்.. அதிர்ஷ்டம் உங்களுக்கா!
May 23, 2025 08:07 AMலட்சுமி தேவிக்கு மிகவும் பிடித்த 5 ராசிகள்.. லட்சுமி அருளால் எப்போதும் செழிப்பான வாழ்க்கை பெறும் யோகம் உங்களுக்கா!
வாழ்கையில் முன்னேறத் தூண்டும் லட்சியம்
நமது வாழ்கையில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்பது அனைவரின் ஆசையாக உள்ளது. வாழ்கை என்பது ஒரு ஓட்டப்பந்தயம் போன்றது, ஆனால் அதில் வெற்றி பெற வேண்டும் என லட்சியம் பலருக்கும் உள்ளது. ஒருவரது ஜாதகத்தில் சாதகமான தசா புத்தி வரும் போது நாம் மேற்கொள்ளும் முயற்சிகள் நம்மை வெற்றியின் பாதையில் அழைத்து செல்லக்கூடியதாக இருக்கும்.
சனியும் செவ்வாயும்
மகரம் ராசிக்கு அதிபதியாக சனி பகவான் உள்ளார். மகரம் ராசிக்காரர்களை சனி பகவான் கெடுக்கமாட்டார். ஏழரை சனி காலத்தில் கூட ஆட்டிப்பார்பாரே தவிர கெடுக்கமாட்டார். மகரம் ராசியில் உள்ள அவிட்டம் நட்சத்திரத்திற்கு செவ்வாய் பகவான் அதிபதியாக உள்ளார். 4 மற்றும் 11ஆம் வீட்டுக்கு உடையவராக செவ்வாய் பகவான் உள்ளார். வீடு, மனை, வாகனம் ஆகிய செல்வங்களின் அதிபதியாகவும் செவ்வாய் பகவான் உள்ளார்.