Tiruvannamalai Girivalam: திருவண்ணாமலை கிரிவல நேரம் அறிவிப்பு.. கிரிவலத்தின் முக்கியத்துவம், பலன்கள், வழிபடும் முறை!
Tiruvannamalai Girivalam: திருவண்ணாமலை கிரிவல நேரம் அறிவிப்பு மற்றும் கிரிவலத்தின் முக்கியத்துவம், கிரிவலத்தின் பலன்கள், வழிபடும் முறை குறித்து அறிவோம்.

Tiruvannamalai Girivalam: ஆவணி மாத பவுர்ணமி திதி என்பது வரும் 19ஆம் தேதி திங்கட்கிழமை அதிகாலை 2:58 மணிக்கு தொடங்கி மறுநாள் 20ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 1:02 மணிக்கு முடிகிறது. இந்த சமயத்தில் திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் செல்ல உகந்தது என அருணாசலேஸ்வரர் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது போன்ற போட்டோக்கள்
Jun 21, 2025 02:47 PMமகாலட்சுமி யோகத்தால் எந்த 3 ராசியினருக்கு அதிர்ஷ்டம் பாருங்க!
Jun 18, 2025 09:56 AMபணப் பிரச்சனைகள் நீங்க வேண்டுமா.. வியாழக்கிழமை வாழை மரத்தை வைத்து இந்த பரிகாரத்தை மட்டும் ட்ரை பண்ணுங்க..
Jun 18, 2025 09:49 AMகனவில் மழையைப் பார்ப்பது நல்லதா கெட்டதா?
Jun 18, 2025 09:39 AMதொழிலில் தடைகள் நீங்கி, வெற்றி தேடி வர என்ன செய்யணும் தெரியுமா.. புதன் கிழமை செய்ய வேண்டிய பரிகாரங்கள் இதோ!
Jun 16, 2025 02:00 PMஉங்கள் கனவில் இந்த பூவை கண்டால்.. வாழ்வில் அதிர்ஷ்டம், செல்வ செழிப்பு பெறலாம்! கனவு சாஸ்திரம் சொல்லும் விஷயம்
Jun 15, 2025 10:35 AMயார் இந்த பாபா வங்கா.. பெரிய மோதல் நடக்கலாம்.. ஜூலை மாதத்திற்கான பாபா வங்காவின் அதிர்ச்சி தரும் கணிப்புகள் இதோ!
ஆவணி மாத பவுர்ணமியின் சிறப்புகள்:
ஆவணி மாதப் பவுர்ணமியன்று கோயில்களுக்குச் சென்று, புனித நதியில் குளித்துவிட்டு, விரதம் பிடித்து சிவபெருமானை வழிபடுவர். அந்த வகையில், தற்போது வரும் ஆவணி மாதப் பவுர்ணமி, தட்சிணாயன காலப் பவுர்ணமி எனப்படுகிறது. இந்த ஆவணி மாதப் பவுர்ணமியில், ஆவணி அவிட்டம், ரக்ஷா பந்தன் ஆகிய சிறப்பு விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.
திருவண்ணாமலையின் முக்கியத்துவம்:
பவுர்ணமி கிரிவலம் என்றாலே அதில் திருவண்ணாமலை கிரிவலம் தான் மிக உயர்ந்தது. இந்த பவுர்ணமி நன்னாளில் உலகை ஆளும் சிவபெருமானையும் பார்வதி தேவியையும், சத்ய நாராயணரையும் வழிபட உகந்த நாளாகப் பார்க்கப்படுகிறது.