Indra Ekadasi: இந்திர ஏகாதசி எப்போது வருகிறது மற்றும் அதன் முக்கியத்துவம் - வழிபட உகந்த நேரம் குறித்து அறிவோம்?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Indra Ekadasi: இந்திர ஏகாதசி எப்போது வருகிறது மற்றும் அதன் முக்கியத்துவம் - வழிபட உகந்த நேரம் குறித்து அறிவோம்?

Indra Ekadasi: இந்திர ஏகாதசி எப்போது வருகிறது மற்றும் அதன் முக்கியத்துவம் - வழிபட உகந்த நேரம் குறித்து அறிவோம்?

Marimuthu M HT Tamil Published Sep 09, 2024 12:58 PM IST
Marimuthu M HT Tamil
Published Sep 09, 2024 12:58 PM IST

Indra Ekadasi: இந்திர ஏகாதசி எப்போது வருகிறது மற்றும் அதன் முக்கியத்துவம் - வழிபட உகந்த நேரம் குறித்து அறிவோம்.

Indra Ekadasi: இந்திர ஏகாதசி எப்போது வருகிறது மற்றும் அதன் முக்கியத்துவம் - வழிபட உகந்த நேரம் குறித்து அறிவோம்?
Indra Ekadasi: இந்திர ஏகாதசி எப்போது வருகிறது மற்றும் அதன் முக்கியத்துவம் - வழிபட உகந்த நேரம் குறித்து அறிவோம்?

இது போன்ற போட்டோக்கள்

பொதுவாக இந்து நாட்காட்டியின்படி, கிருஷ்ண பண்டிகை மாதத்தில் இந்திர ஏகாதசி கொண்டாடப்படுகிறது. இதற்கு சிரத்தா ஏகாதசி என்ற பெயரும் உண்டு. இந்திர ஏகாதசி என்பது இந்திரனின் அருளையும் காக்கும் கடவுளான விஷ்ணுவின் அருளையும் பெற்றுத்தரும் விரதமாகப் பார்க்கப்படுகிறது. 

இந்த ஆண்டு இந்திர ஏகாதசி எப்போது வருகிறது, வழிபாட்டு நேரம் மற்றும் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளுங்கள்.

இந்திர ஏகாதசியின் முக்கியத்துவம் - இந்திர ஏகாதசி விரதத்தின் முக்கியத்துவத்தை பகவான் கிருஷ்ணரே தர்மராஜ யுதிஷ்டிரரிடம் கூறியுள்ளார். 

இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம் ஒருவர் யமலோகத்திலிருந்து முக்தி பெறுகிறார் என்று புராணங்கள் கூறுகின்றன. இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம், முன்னோர்கள் இரட்சிக்கப்படுகிறார்கள். மேலும் இந்த விரதத்தை மேற்கொள்ளும் அந்த நபர் அனைத்து பாவங்களிலிருந்தும் விடுபடுகிறார். குறிப்பாக பித்ருக்களின் சாபத்தில் இருந்து விடுபடுகிறார். 

தேவலோகத்தின் அதிபதியாக இருக்கும் இந்திரன், நல்ல போகங்களுக்கும் அதிபதியாக உள்ளார். எனவே, இந்திர ஏகாதசி நாளில் விரதமிருந்தால், இந்திரனின் ஆசியும் விஷ்ணுவின் அருட்பார்வையும் நம் மீது விழும் என்பது நம்பிக்கை.

இந்திர ஏகாதசி எப்போது?:

இந்த ஆண்டு இந்திர ஏகாதசி விரதம் வரக்கூடிய செப்டம்பர் 28ஆம் தேதி சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது.

இந்திர ஏகாதசி பூஜை செய்ய மங்கள நேரம் - த்ரிக் பஞ்சாங்கத்தின்படி, ஏகாதசி நாளில் வழிபாட்டின் நல்ல நேரம் காலை 04:36 முதல் 05:24 வரை இருக்கும். அபிஜித் காலம் காலை 11:47 முதல் மதியம் 12:24 வரை இருக்கும். 

அதாவது அபிஜித் காலம் என்றால், நல்ல நாளில் வரும் முகூர்த்தநேரத்தைத் தவறவிட்டவர்கள் பயன்படுத்தும் அடுத்தநேரம் ஆகும். ஜித் என்றால் வெற்றி அடைதல், அபிஜித் என்றால் சிறப்பான வெற்றி அடைதல் என்று பெயர். 

இந்திர ஏகாதசியன்று ராகு காலம்: காலை 09.11 மணி முதல் 10.41 மணி வரை ராகு காலம் இந்திர ஏகாதசியில் இருக்கும்.

ஏகாதசி திதியானது, வரும் செப்டம்பர் 27ஆம் தேதி மதியம் 01:20 மணிக்குத் தொடங்கி, செப்டம்பர் 28ஆம் தேதி அன்று மதியம் 02:49 மணிக்கு முடிவடைகிறது.

இந்திர ஏகாதசி விரத புராண நேரம்:

இந்திர ஏகாதசி விரத புராணம் வரும் செப்டம்பர் 29ஆம் தேதி, சனிக்கிழமை அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. விரத புராணத்தின் நல்ல நேரம் காலை 06.12 முதல் 08.35 வரை இருக்கும்.

ஏகாதசி விரதத்தின்போது என்ன சாப்பிட வேண்டும்: இந்து சாஸ்திரங்களின்படி, ஏகாதசி விரதத்தின்போது சிலர் ஜலஹர் விரதத்தைக் கடைப்பிடிக்கின்றனர். இந்த ஜலஹர் நோன்பில் பெரும்பாலானோர் நீர் மட்டுமே பருகுகின்றனர். இதிலும், பழம் நோன்பு நோற்பவர்கள், பிற இதர உணவுகளை அன்றைய நாளில் தவிர்த்து பழங்களை மட்டுமே உண்பார்கள்.

பொறுப்பு துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.