தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  உச்ச கோபத்தில் சனிபகவான்.. முரட்டு அடி விழுவது உறுதி.. சிக்கிக்கொண்ட ராசிகள் இவர்கள்தான்

உச்ச கோபத்தில் சனிபகவான்.. முரட்டு அடி விழுவது உறுதி.. சிக்கிக்கொண்ட ராசிகள் இவர்கள்தான்

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 16, 2024 05:58 PM IST

Lord Sani: நவகிரகங்களில் இருக்கக்கூடிய சக்தி வாய்ந்த கிரகமாக சனி பகவான் விளங்கி வருகின்றார். தற்போது அவருடைய கோபமான உக்கிர பார்வை சில ராசிகளின் மீது விழுகின்றது. இதனால் சில ராசிகளுக்கு சில சிரமங்கள் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

சனி பகவான்
சனி பகவான்

30 வருடங்களுக்கு பிறகு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் தற்போது பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார் வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார்.

சனி பகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப இரட்டிப்பாக பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கின்ற காரணத்தினால் அனைவரும் இவரை கண்டால் அச்சப்படுவார்கள். சனி பகவானின் அனைத்து விதமான அசைவுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

நவகிரகங்களில் இருக்கக்கூடிய சக்தி வாய்ந்த கிரகமாக சனி பகவான் விளங்கி வருகின்றார். தற்போது அவருடைய கோபமான உக்கிர பார்வை சில ராசிகளின் மீது விழுகின்றது. இதனால் சில ராசிகளுக்கு சில சிரமங்கள் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

கடக ராசி

 

சனிபகவானின் கோப பார்வையால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்படாதீர்கள் வாய்ப்பு உள்ளது. பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் கவனமாக இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனம் செலுத்த வேண்டும். வாழ்க்கையில் அவ்வப்போது சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. சனி பகவானின் உக்கிர பார்வை 10 மாத காலம் இருக்கின்ற காரணத்தினால் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

விருச்சிக ராசி

 

சனிபகவானின் கோபப்பார்வை உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்களை ஏற்படுத்த அதிக வாய்ப்பு உள்ளது. குடும்ப வாழ்க்கையில் சண்டைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். புதிய முதலீடுகள் செய்வதை தவிர்க்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. மன அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. தொழில் மற்றும் வியாபாரம் சற்று மந்தமாக இருக்கும்.

மகர ராசி

 

ஏற்கனவே உங்களுக்கு ஏழரை சனியின் கடைசி காலம் நடந்து கொண்டிருக்கின்றது. தற்போது சனி பகவானின் கோபப்பார்வை உங்களுக்கு மேலும் சிக்கல்களை ஏற்படுத்த அதிக வாய்ப்பு உள்ளது. தனிப்பட்ட வாழ்க்கைகள் சிரமங்கள் ஏற்படக்கூடும். மன அழுத்தம் மற்றும் சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. சுய ஒழுக்கம் மற்றும் பொறுமை மிகவும் அவசியமாகும். திட்டமிட்டு செயல்படுவதை கொஞ்சம் தள்ளி வைப்பது நல்லது.

கும்ப ராசி

 

உங்கள் ராசியில் சனி பகவான் பயணம் செய்து வருகின்றார். இருப்பினும் ஏழரை சனியின் இரண்டாவது கட்டம் உங்களுக்கு நடந்து கொண்டிருக்கின்றது. எனவே எச்சரிக்கையாக இருப்பது நல்லது. சனி பகவான் கோபப்பார்வைகளால் உங்கள் வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. அடுத்த பத்து மாத காலம் உங்களுக்கு சோதனைகளாக இருக்கும். பொறுமையோடு இருப்பது நல்லது. கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும். திருமண மற்றும் குடும்ப வாழ்க்கையில் அவ்வப்போது சண்டைகள் ஏற்பட்டாலும் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

 

WhatsApp channel