Friday Tips : வெள்ளிக்கிழமை இதை செய்தால் வீட்டில் பணப்புழக்கம் அதிகரிக்குமாம்!
வெள்ளிக்கிழமையில் நாம் கடைபிடிக்க வேண்டிய சில விஷயங்கள் என்னென்ன? என்பது குறித்து இதில் காண்போம்.
வெள்ளிக்கிழமை மிகவும் விசேஷமான ஒரு திருநாளாக கொண்டாடப்படுகிறது.எந்த காரியம் செய்தாலும் வெள்ளிக் கிழமை தொடங்கினால் நல்லதே நடக்கும் என சொல்லப்படுகிறது. இந்த வெள்ளிக்கிழமையில் வீட்டில் விளக்கு ஏற்றி வழிபடுவது உண்டு. இந்த வெள்ளிக்கிழமையில் நாம் கடைபிடிக்க வேண்டிய சில விஷயங்கள் என்ன என்பது குறித்து இதில் காண்போம்.
வெள்ளிக்கிழமை முடி, நகங்களை வெட்டிக் கொள்வது மங்களகரமானது என நம்பப்படுகிறது. வெள்ளி முடி, நகம் வெட்டி கொள்வதால் வெற்றி வாய்ப்பு அதிகமாகும். புகழும், செல்வமும் பெருகும் என சொல்லப்படுகிறது
வெள்ளிக்கிழமையில் பெருமாள் கோவிலுக்கு சென்று பால் வாங்கி அபிஷேகத்திற்கு கொடுக்க வேண்டும். அப்படி செய்தால் இல்லத்தில் சுபிட்சம் நிலைத்து நிற்கும்.
வெள்ளிக்கிழமையில் காலை அல்லது மாலை வேளையில் மகாலட்சுமிக்கு மொச்சை பயறு அல்லது பச்சை பயறு ஆகியவற்றில் சுண்டல் செய்து வழிபட வேண்டும்.
மொச்சையை சுக்கிர ஹோரையில் வெள்ளிக்கிழமை அன்று நீங்கள் காசு கொடுத்து வாங்கி வந்து வீட்டில் வையுங்கள். இப்படி செய்தால் மகாலட்சுமியின் வருகை நம் வீட்டில் இருக்கும் என்று நம்பப்படுகிறது.
பொதுவாக வெள்ளிக்கிழமையில் கல் உப்பு, நல்லெண்ணெய், தயிர், அரிசி வாங்கினால் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும் என்று சொல்லுவார்கள்.
ஆனால் இன்றைய தினம் அரிசியை வறுக்கவோ, புடைக்கவும் கூடாது.
இப்படி தொடர்ந்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் செய்து வந்தால், வீட்டில் பணப்புழக்கம் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.
பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை அனைத்தும் பொதுவான கணிப்பில் கொடுக்கப்பட்டுள்ளன. தேவை இருப்பின் சரியான நிபுணரை அணுகி தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்