தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Pamban Bridge: ஹைட்ராலிக் இயந்திரம் மூலம் நகர்த்தப்படும் பாம்பன் தொங்கும் பாலம்! விறுவிறுப்பாக நடக்கும் பணிகள்

Pamban Bridge: ஹைட்ராலிக் இயந்திரம் மூலம் நகர்த்தப்படும் பாம்பன் தொங்கும் பாலம்! விறுவிறுப்பாக நடக்கும் பணிகள்

Mar 15, 2024 03:43 PM IST Muthu Vinayagam Kosalairaman
Mar 15, 2024 03:43 PM IST
  • ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் தீவுப் பகுதியை மண்டபம் பகுதியுடன் இணைக்கும் ரயில் பாலம் பாம்பன் உள்ளது. கடலின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் இந்த பாலம், 1914ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி பயன்பாட்டுக்கு வந்தது. நூற்றாண்டு பழமையான இந்த பாலத்தில் உள்ள தொங்கு பாலம் சீரமைக்கப்பட்டு வரும் நிலையில், ரயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த 2022 ஜனவரியில் ரூ.535 கோடி செலவில் புதிய ரயில் பாலம் கட்டும் பணி தொடங்கியது. பாம்பன் கடற்கரையில் நிறுவவதற்கு, நவீன முறையில் வடிவமைக்கப்பட்ட புதிய மின்சார லிப்ட் தொங்கு பாலம் 100 சதவீதம் நிறைவடைந்ததை அடுத்து, அதை ஹைட்ராலிக் லேண்டிங் கிர்டர் என்ற இயந்திரம் மூலம் கொண்டு செல்லும் பணியை ரயில்வே பொறியாளர்கள் தொடங்கியுள்ளனர்
More