Tirupati Laddu: திருப்பதி லட்டு விவகாரம்..நெய் சப்ளை செய்த தமிழ்நாடு நிறுவனம் தரப்பில் விளக்கம் - எந்த ஆய்வுக்கும் தயார்
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Tirupati Laddu: திருப்பதி லட்டு விவகாரம்..நெய் சப்ளை செய்த தமிழ்நாடு நிறுவனம் தரப்பில் விளக்கம் - எந்த ஆய்வுக்கும் தயார்

Tirupati Laddu: திருப்பதி லட்டு விவகாரம்..நெய் சப்ளை செய்த தமிழ்நாடு நிறுவனம் தரப்பில் விளக்கம் - எந்த ஆய்வுக்கும் தயார்

Published Sep 20, 2024 07:30 PM IST Muthu Vinayagam Kosalairaman
Published Sep 20, 2024 07:30 PM IST

  • திருப்பதி லட்டு பிரசாதத்தில் நெய்க்கு பதிலாக விளங்குகளின் கொழுப்புகள், மீன் எண்ணெய் பயன்படுத்தி மாசுபடுத்தியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, இந்த விவகாரம் தொடர்பாக பேசிய நிலையில் கடந்த 5 ஆண்டு காலம் ஆட்சி செய்த ஓய்.எஸ்.ஆர். கட்சி திருமலை புனிதத்தை கெடுத்துவிட்டதாக கூறினார். திருப்பதி கோயிலுக்கு லட்டு தயாரிக்க திண்டுக்கல் பகுதியை சேர்ந்த ஏ.ஆர். டைரி ஃபுட்ஸ் நெய் சப்ளை செய்துள்ளது. இதில் அந்த நிறுவனத்தின் நெய் தரமற்றதாக இருந்ததாக கூறி தேவஸ்தானம் தரப்பில் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது. அத்துடன் அந்த நிறுவனத்தையும் பிளாக் லிஸ்ட் செய்தது. இந்த சூழ்நிலையில் அது கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் முடிந்து போன விவகாரம் எனவும், தங்களது நிறுவனம் நெய் தரமானது என்பதை எங்கு வேண்டுனாலும் நிருபிக்க தயார் என ஏ.ஆர். டைரி ஃபுட்ஸ் நிர்வாகிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

More