Thirukural: 100 திருக்குறள்களை தலைகீழாக சொல்லி அசத்தும் 7 வயது சிறுவன்!
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Thirukural: 100 திருக்குறள்களை தலைகீழாக சொல்லி அசத்தும் 7 வயது சிறுவன்!

Thirukural: 100 திருக்குறள்களை தலைகீழாக சொல்லி அசத்தும் 7 வயது சிறுவன்!

Published Feb 21, 2024 04:22 PM IST Manigandan K T
Published Feb 21, 2024 04:22 PM IST

  • கோவை வெள்ளலூர் பகுதியை சேர்ந்தவர்கள் பிரசாந்த், ஜீவிதா தம்பதியினர். இவர்களது 7 வயது மகன் கவின் சொற்கோ, பீளமேடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறான். திருக்குறள் படிப்பதில் ஆர்வம் கொண்ட கவின் சொற்கோ, தினமும் திருக்குறள்களை படிப்பதை வழக்கமாக கொண்டுள்ளான். நல்ல நினைவாற்றல் இருப்பதன் காரணமாக கடினமான திருக்குறள்களை கூட நினைவில் வைத்திருந்து எளிதாக சொல்லும் திறன் கவின் சொற்கோவிற்கு இருக்கிறது. இதனையறிந்த அவனது பெற்றோர் அதற்கேற்ப திருக்குறள்களை சொல்லித் தந்துள்ளனர்.அதன் விளைவாக தற்போது 100 முதல் 1 வரையுள்ள 100 திருக்குறள்களை தலைகீழ் வரிசையில் சொல்லி அசத்துகிறான், கவின் சொற்கோ

More