முறுக்கேற்றிய விஜய்.. மேக்கப் போட்ட லோகி.. லுக்கு விட்ட த்ரிஷா தெறிக்க விட்ட அனிருத்! - லியோ மேக்கிங் வீடியோ!
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  முறுக்கேற்றிய விஜய்.. மேக்கப் போட்ட லோகி.. லுக்கு விட்ட த்ரிஷா தெறிக்க விட்ட அனிருத்! - லியோ மேக்கிங் வீடியோ!

முறுக்கேற்றிய விஜய்.. மேக்கப் போட்ட லோகி.. லுக்கு விட்ட த்ரிஷா தெறிக்க விட்ட அனிருத்! - லியோ மேக்கிங் வீடியோ!

Published Oct 19, 2024 01:09 PM IST Kalyani Pandiyan S
Published Oct 19, 2024 01:09 PM IST

நடிகர் விஜய் நடிப்பில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கடந்த வருடம் அக்டோபர் மாதம் வெளியான திரைப்படம் லியோ. இந்தத் திரைப்படம் வெளியாகி ஒரு வருடம் நிறைவடைந்து இருக்கும் நிலையில், லியோ படத்தின் மேக்கிங் வீடியோ வெளியிடப்பட்டு இருக்கிறது. 

 

நாம் என்னதான் வன்முறை தவறு என பேசினாலும், தங்களது மாஸ் ஹீரோ இதுபோன்ற கதைகளில் நடிப்பதையே மக்கள் பெரும்பாலும் விரும்புகின்றனர். இதுபோன்ற படங்களுக்குத்தான் வெற்றியையும் தருகின்றனர். மக்கள் விரும்பும் கதை அப்படி நடிகர் விஜய் ரசிகர்களின் விருப்பத்திற்கு விருந்து வைக்கும் நோக்கில் எடுக்கப்பட்டது தான் லியோ திரைப்படம்.

 

நடிகை த்ரிஷா, நடிகர்கள் கௌதம் வாசுதேவ் மேனன், சஞ்சய் தத், அர்ஜூன், மன்சூர் அலிகான் என பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்த இந்தப் படம் நடிகர் விஜய்யின் கெரியரில் அதிகம் வசூல் செய்த படமாக மாறியது.  செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ தயாரிப்பில் அனிருத் இசையில் வெளியான இந்தத் திரைப்படம் வெளியாகும் முன்பே சர்ச்சையைக் கிளப்பியது. 

 

இந்தப் படத்தில் வெளியான நான் ரெடி தான் வரவா எனும் பாடல், விஜய் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது. அதே சமயத்தில், இப்பாடலில் இடம் பெற்றிருந்த சில வரிகள் போதைப்பழக்கத்தை ஊக்குவிப்பதாக அமைந்திருந்தது. இதையடுத்து அந்த பாடல் வரிகள் பாடலில் இருந்து நீக்கப்பட்டதுடன், சில இடங்களில் பாடல் மியூட் செய்தும் ஒலிபரப்பப்பட்டது. லியோ கதை ஹிமாச்சலப் பிரதேசத்தில் மனைவி, மகன் மகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார் பார்த்திபன்(விஜய்). 

 

இந்நிலையில், இவர் நடத்திவரும் காஃபி ஷாப்பிற்கு வந்த கொள்ளை கும்பல் ஒன்று, பார்த்திபனின் மகளை தாக்க வரும்போது, தன் கட்டுப்பாட்டை இழந்த பார்த்திபன், கொள்ளைக் கும்பலிடம் அதிரடியாக சண்டையிட்டு அவர்களை கொலை செய்கிறார். இந்த செய்தி நாடு முழுவதும் பரவ, பார்த்திபன் தான் நாம் தேடிவரும் லியோ தாஸ் என நினைத்து அடுத்தடுத்த கும்பல் அவரைத் தேடி இமாச்சலப் பிரதேசத்திற்கு வருகிறது. இதனால், பார்த்திபனின் குடும்பத்திற்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்படுகிறது. 

 

முதலில் இதை போலீஸ் உதவியுடன் சரிசெய்ய நினைக்கும் பார்த்திபன், பின் குடும்பத்தைக் காக்க அவரே களத்தில் இறங்குகிறார். அவர் ஏன் லியோ தாஸ் என அழைக்கப்படுகிறார். அவரிடம் மிருகத் தனமான குணம் எப்படி வந்தது என்பதை அடிப்படையாக கொண்டு உருவான ஆக்ஷன் திரில்லர் திரைப்படம் தான் லியோ. 

 

லியோ படம் தமிழ்நாட்டில் விரைவில் 100கோடி வசூலை எட்டியப் படம் என்ற அந்தஸ்தை பெற்றதுடன், அண்டை மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தில் வெளியான பாடல்கள்அனைத்தும் பெரியவர்களைக் கடந்து குழந்தைகளுக்கும் பிடிக்கும் வண்ணம் அமைந்துள்ளது. இதனால், இப்படத்தின் பாடல்கள் யூடியூபிலும் சாதனைகள் படைத்தன. லியோ 2 இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜூடன் இணைந்து பணியாற்ற பலரும் விருப்பம் தெரித்து வருகின்றனர். 

 

இளைஞர்கள் அவரது லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸை புகழ்ந்து தள்ளி வருகின்றனர். அத்துடன் நில்லாமல் லியோ படத்தின் 2ம் பாகம் குறித்தும் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கு பதிலளித்த லோகேஷ் கனகராஜ், நிச்சயம் அந்த ஆசை உள்ளது. அப்படி எடுத்தால் அந்த படத்திற்கு பார்த்திபன் என்ற பெயரைத்தான் வைப்பேன் என்றார். ஆனால், அதற்குள்ளாக நடிகர் விஜய் முழுநேர அரசியலில் இறங்க உள்ளதாகக் கூறி திரைப்படங்களில் இனி நடிக்கமாட்டேன் என அறிவித்து அவரது ரசிகர்களை சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளார்.

 

 

More