Actor Allu Arjun: வாக்களித்த பின் நடிகர் அல்லு அர்ஜூன் சொன்ன அந்த வார்த்தை!
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Actor Allu Arjun: வாக்களித்த பின் நடிகர் அல்லு அர்ஜூன் சொன்ன அந்த வார்த்தை!

Actor Allu Arjun: வாக்களித்த பின் நடிகர் அல்லு அர்ஜூன் சொன்ன அந்த வார்த்தை!

Published May 14, 2024 12:05 AM IST Karthikeyan S
Published May 14, 2024 12:05 AM IST

  • மக்களவைத் தோ்தலில் 4-ஆம் கட்டமாக ஆந்திரம், தெலங்கானா, ஒடிஸா உள்ளிட்ட 9 மாநிலங்களில் 95 தொகுதிகள், ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் ஒரு தொகுதி என மொத்தம் 96 தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நான்காம் கட்ட மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவுக்காக நடிகர் அல்லு அர்ஜூன் ஜூப்ளி ஹில்ஸில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் தனது வாக்கை பதிவு செய்தார். வாக்களித்த பின் செய்தியாளர்களை சந்தித்து நடிகர் அல்லு அர்ஜூன் கூறுகையில், தயவு செய்து வாக்களிக்கவும். நம் வாழ்க்கையின் அடுத்த 5 ஆண்டுகளுக்கான மிக முக்கியமான நாள் இன்று. அதிக அளவிளான வாக்காளர்கள் வாக்களிக்க வருவதால் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. நான் எந்த ஒரு அரசியல் கட்சியுடனும் இணையவில்லை, அனைத்து கட்சிகளிடமும் நடுநிலையாக இருக்கிறேன்." என்றார்.

More