Dindigul : திக்திக் சம்பவம் .. தேர்தல் கால் புணர்ச்சி.. அதிமுகவினரை தாக்கிய திமுக தலைவர்!
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Dindigul : திக்திக் சம்பவம் .. தேர்தல் கால் புணர்ச்சி.. அதிமுகவினரை தாக்கிய திமுக தலைவர்!

Dindigul : திக்திக் சம்பவம் .. தேர்தல் கால் புணர்ச்சி.. அதிமுகவினரை தாக்கிய திமுக தலைவர்!

Published Apr 20, 2024 04:57 PM IST Divya Sekar
Published Apr 20, 2024 04:57 PM IST

  • திண்டுக்கல்லை அடுத்துள்ள அகரம் பேரூராட்சி உட்பட்ட கருங்கல்பட்டி கிராமத்தில் தேர்தல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அதிமுகவை சேர்ந்த குழந்தை ராஜமாணிக்கம், சவரிமுத்து, ஞானமணி ஆகிய 3 பேரை அகரம் பேரூராட்சி திமுக தலைவர் நந்தகோபால் என்ற கருத்த மணி திமுக குண்டர்களுடன் சேர்ந்து வீடு புகுந்து பெண்கள் உட்பட மூன்று பேரை தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். அப்போது மூவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தில் உள்ள பொதுமக்கள் திரண்டு வந்து திமுக தலைவர் நந்தகோபாலை சூழ்ந்து கொண்டு சரமாரியாக கேள்விகளை எழுப்பி முற்றுகையிட்டனர். பாதிக்கப்பட்ட மூன்று பேரையும் ஊர் பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.தேர்தல் கால் புணர்ச்சி காரணமாக திமுக தலைவர் அதிமுகவினரை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

More