Fishermen Arrested: தமிழக மீனவர்கள் கைது..தொடரும் இலங்கை கடற்படையின் அத்துமீறல்!
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Fishermen Arrested: தமிழக மீனவர்கள் கைது..தொடரும் இலங்கை கடற்படையின் அத்துமீறல்!

Fishermen Arrested: தமிழக மீனவர்கள் கைது..தொடரும் இலங்கை கடற்படையின் அத்துமீறல்!

Published Mar 17, 2024 10:45 AM IST Karthikeyan S
Published Mar 17, 2024 10:45 AM IST

  • Rameshwaram Fishermen: எல்லையைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 21 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. ராமேஸ்வரத்தில் இருந்து விசைப்படகுகளில் 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர். நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படை தமிழக மீனவர்கள் 21 பேரை இரண்டு விசைப்படகுகளுடன் கைது செய்துள்ளது. கைதான மீனவர்களை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்ற இலங்கை கடற்படை அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறது. இலங்கை கடற்படையினரின் அத்துமீறல் தமிழக மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

More