Weather Update: சென்னை வாசிகளே எச்சரிக்கை.. இன்று எந்த 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
Weather Update: தென்னிந்திய பகுதிகளுக்கு மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்நிலையில் இன்றைய தினம் வேலூர், ராயப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சியில் கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

Weather Update: வேலூர் ராணிப்பேட்டை காஞ்சிபுரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென்னிந்திய பகுதிகளுக்கு மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்நிலையில் இன்றைய தினம் வேலூர், ராயப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை கள்ளக்குறிச்சியில் கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் பரவலாக மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வரும் ஜூன் 22 மற்றும் 23ஆம் தேதி மிக அதிக கன மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மழை திண்டுக்கல், தேனி, நீலகிரி கோவை உள்ளிட்ட பகுதிகளிலும் கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது