Weather Update : ஜாலிதான்.. தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரம் மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எது பாருங்க
Weather Update : கன்னியாகுமரி, நாகப்பட்டினம், திருவாரூர், ராமநாதபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது
Weather Update : தமிழகத்தில் கன்னியாகுமரி, இராமநாதபுரம், நாகபட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 4 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் நான்கு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது கன்னியாகுமரி, நாகப்பட்டினம், திருவாரூர், ராமநாதபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது