Thillaiyadi Valliammai: ’அகிம்சை போராட்டத்தில் காந்தியை வியக்க வைத்த தமிழ்ப்பெண்!' தில்லையாடி வள்ளியம்மை நினைவு தினம்!
“அதுவரை பெண்கள் போராட்டத்தில் ஈடுபடுத்தாத காந்திஜி இப்போது பெண்களை இணைத்துக்கொண்டதற்கு காரணம், இச்சட்டத்தால் அதிகம் பாதிக்கப்படுவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்பதால்தான்”

125 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் தென்னாப்பிரிக்காவின் ஜோகனஸ்பெர்க் நகரில் பிறந்தார். ஆங்கிலேயர் தென்னப்பிரிக்காவில் தங்கள் ஆக்கிரமிப்பை விரிவுபடுத்திக்கொண்டிருந்த காலம் அது. தென்னாப்பிரிக்காவில் பயிர்த்தொழில் செய்யத் தெரிந்தவர்களை வெள்ளையர்களை தேடி அலைந்து கொண்டிருந்தார்கள். ஏனெனில், அங்கிருந்த கருப்பின மக்களோடு, ஆங்கிலேயர்களோடு சண்டையிட்டு கொண்டிருந்த காலம் அது.
ஆங்கிலேயர்கள், இந்தியா போன்று தனது ஆக்கிரமிப்பில் ஏற்கனவே உள்ள நாடுகளில் இருந்து கூலித் தொழிலாளர்களை இறக்குமதி செய்துகொண்டிருந்த காலம் அது.
அப்படி ஒரு கூலித்தொழிலாளியாகத்தன் தற்போதைய மயிலாடுதுறை மாவட்டம் தில்லையாடியிலிருந்து சென்றவர்கள் முனுசாமியும், மங்களமும். அவர்களுக்கு பிறந்த வீரப்பெண்மணிதான் வள்ளியம்மை. அங்கு அவரது தந்தை சிறு வியாபாரத்தை துவக்கினார்.