திருவள்ளூர் அருகே பயணிகள் ரயிலும் சரக்கு ரயிலும் மோதி பயங்கர விபத்து! இதுவரை உயிரிழப்பு இல்லை! மீட்பு பணிகள் தீவிரம்!
திருவள்ளூர் கவரைப் பேட்டை ரயில் நிலையத்தில் ரயில் விபத்து மோதி விபத்து ஏற்பட்டு உள்ளது. தீப்பற்றி 3பெட்டிகள் எரிந்த நிலையில் 2 பெட்டிகள் மேலே ஏறி நிற்கிறது. லூப்பில் நின்ற சரக்கு ரயில் மீது சென்னையில் இருந்து பிகார் மாநிலம் தர்ப்பங்கா செல்லும் விரைவு ரயில் மோதி இந்த விபத்து ஏற்பட்டது.

திருவள்ளூர் அருகே கவரைப் பேட்டை ரயில் நிலையத்தில் ரயில் விபத்து மோதி விபத்து ஏற்பட்டு உள்ளது. தீப்பற்றி 3 பெட்டிகள் எரிந்த நிலையில் 2 பெட்டிகள் மேலே ஏறி நிற்கிறது. லூப்பில் நின்ற சரக்கு ரயில் மீது சென்னையில் இருந்து பிகார் மாநிலம் தர்ப்பங்கா செல்லும் விரைவு ரயில் மோதி இந்த விபத்து ஏற்பட்டது.
மைசூர் - தர்பங்கா விரைவு ரயில் விபத்து தொடர்பாக அவசர உதவி எண்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 044 25354151, 044 24354995 ஆகிய எண்ணை தொடர்பு கொண்டு மருத்துவ உதவிகள், மீட்பு நடவடிக்கைகள் குறித்து தொலைபேசி எண்கள் மூலம் தகவல் பெறலாம். விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தற்போது வரை 5 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிய வந்துள்ளது என தலைமைச் செயலாளர் முருகானந்தம் கூறி உள்ளார்.
நடந்தது என்ன?
வண்டி எண் 12578 பொன்னேரியை இரவு 9.27 மணிக்கு கடந்து சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது. ரயில் பயணிகள் பயங்கர சத்தத்துடன் கூடிய மோதலை அனுபவித்தனர். மேலும் ரயில் லூப் லைனில் நுழைந்து சரக்கு ரயிலுடன் மோதியது.இந்த அதிர்ச்சி சம்பவத்தில் இதுவரை உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை, காயம் அடைந்தவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றது.
