HBD Kavimani Desigavinayagam Pillai: ஆசிரியர் டூ ஆராய்ச்சியாளர்..யார் இந்த கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை?
Kavimani Desigavinayagam Pillai: கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை ஆராய்ச்சித் துறையிலும் பல அரிய பணிகளை ஆற்றியிருக்கிறார். 1922-இல் 'மனோன்மணியம் மறுபிறப்பு' என்ற திறனாய்வுக் கட்டுரையை எழுதினார்.

மறைந்த தமிழக மறுமலர்ச்சிக் கவிஞர் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையின் பிறந்தநாள் இன்று (ஜூலை 27). இந்நாளில் அவரை பற்றிய அறிய தகவல்களை இந்த சிறப்பு கட்டுரை மூலம் தெரிந்துகொள்வோம்.
பிறப்பு
கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை அவர்கள் கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரத்தை அடுத்த தேரூர் கிராமத்தில் 1876 ஆம் ஆண்டு சிவதாணுபிள்ளை - ஆதிலெட்சுமி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். ஆரம்பப் பள்ளிக் கல்விக்குப் பின் எம்.ஏ. பட்டம் பெற்ற இவர், பின்னர் ஆசிரியர் பயிற்சி முடித்து தான் படித்த பள்ளியிலேயே ஆசிரியராக பணியாற்றினார். நாகர்கோவிலில் உள்ள கோட்டார் ஆரம்பப்பள்ளி, நாகர்கோவில் ஆசிரியர் பயிற்சிப்பள்ளி மற்றும் திருவனந்தபுரம் பெண்கள் கல்லூரி போன்றவற்றில் ஆசிரியராக 36 ஆண்டுகள் பணிபுரிந்தார்.
திருமண வாழ்க்கை
உமையம்மை எனும் பெண்ணை 1901 ல் மணம் முடித்தார். கவிமணி தன் மனைவியை குட்டி, பிள்ளாய் என்று அழைத்து கொண்டிருந்த நாட்களில் கவிமணி தன் மனைவியை தாயி என்று மரியாதையுடன் அழைப்பார். குழந்தைப்பேறு இல்லாத கவிமணி தனது அக்காள் மகன் சிவதாணுவை தனது மகன் போலவே வளர்த்தார்.