Suicide : 10ம் வகுப்பு தேர்வில் 410 மதிப்பெண்கள் எடுத்த மாணவிக்கு எமனான தந்தையின் குடிப்பழக்கம் – கடிதத்தில் உருக்கம்
Student Suicide : தந்தையின் குடிப்பழக்கத்தால் உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தந்தையின் குடிப்பழக்கத்தால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட மாணவி
வேலூர் மாவட்டம் சின்ன ராஜாகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபு. கூலி தொழிலாளி. இவரது மனைவி கற்பகம். இவர்களுக்கு பிரகாஷ் (17). என்ற மகனும், விஷ்ணுபிரியா (16) மகளும் உள்ளனர்.
பிரகாஷ் 12ம் வகுப்பு முடித்துள்ளார். விஷ்ணுபிரியா தற்போது நடந்து முடிந்த 10ம் வகுப்பு தேர்வில் 410 பெற்றிருந்தார். பிரபு குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி தினமும் குடித்துவிட்டு வந்து வீட்டில் தகராறுசெய்வதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களது குடும்பம் மகிழ்ச்சி இல்லாமல் இருந்துள்ளது. இரவு என்றாலே வீட்டில் சண்டை, சச்சரவாக இருந்துள்ளது. இந்த நிலையில் நேற்று பிரபு கூலி வேலைக்கு சென்றுவிட்டார்.
பிரகாஷ் வெளியே சென்றிருந்தார். கற்பகம் 100 நாள் வேலைக்கு சென்றிருந்தார்.
