Startup Tamizha: ’ஸ்டார்ட் அப் தமிழா!’ வருகிறது தொழில் முனைவோர்களுக்கான ரியாலிட்டி ஷோ!
“இந்த முயற்சி புத்தொழில் நிறுவனங்களுக்கு முதலீடுகளை ஈர்க்க உதவுவதுடன், முதலீட்டாளர்களுக்கும் நவீன முதலீட்டு வாய்ப்புகளை அறிந்து கொள்ளவும் உதவியாக இருக்கும்”

தமிழ்நாட்டில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் ‘ஸ்டாட் அப் தமிழா’ என்ற நிகழ்ச்சியை நடத்த உள்ளதாக Startup TN அமைப்பு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழ்நாடு அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் இயங்கி வரும் StartupTN – தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கமானது, தமிழ்நாட்டினை புத்தொழில் நிறுவனங்களுக்கேற்ற சூழமைவு கொண்ட உலகின் சிறந்த இடங்களில் ஒன்றாக உருவாக்க வேண்டும் என்ற இலக்குடன், தொலைநோக்கு பார்வையோடு பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.
புத்தொழில் முனைவோர்களுக்கு நிதி உதவி, ஆலோசனைகள், உயர் திறன் தொழில் பயிற்சிகள் வழங்குதல், முதலீட்டாளர்கள் இணைப்பு, உலகளாவிய சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தி தருதல் என பல தளங்களிலும் இயங்கி வருகின்றது.