Naam Tamilar: 'ஆட்சியாளர்கள் ரியல் எஸ்டேட் புரோக்கர்களாக செயல்படுகின்றனர்' - சீமான்
முதலமைச்சரும் பிரதமரும் ரியல் எஸ்டேட் புரோக்கர்களாக செயல்படுகின்றனர் என சீமான் விமர்சனம் செய்துள்ளார்.

'ஆட்சியாளர்கள் ரியல் எஸ்டேட் புரோக்கர்களாக செயல்படுகின்றனர்' - சீமான்
நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் இன்று காலை 10 மணியளவில் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸில் நடைபெற்றது.
அப்போது பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில், ‘’ என்னுடைய உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழ்கின்ற தாய்த்தமிழ் உறவுகளே. உங்கள் அனைவருக்கும் அன்பு வணக்கம். இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி.
இது டிசம்பர் மாதத்தில் நடத்தியிருக்க வேண்டிய பொதுக்குழு கூட்டம். மழை வெள்ளத்தால் சென்னை - தூத்துக்குடி மாவட்டங்களில் களப்பணியில் ஈடுபட்டதால் நடத்தமுடியவில்லை.