தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Thoothukudi:தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி தலைவியாக பிரம்மசக்தி போட்டியின்றி தேர்வு

Thoothukudi:தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி தலைவியாக பிரம்மசக்தி போட்டியின்றி தேர்வு

Karthikeyan S HT Tamil
Nov 08, 2022 01:20 PM IST

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி தலைவராக திமுக பெண் கவுன்சிலர் பிரம்மசக்தி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

ட்ரெண்டிங் செய்திகள்

மொத்தம் உள்ள 17 கவுன்சிலர்களில் 15 பேர் பிரம்மசக்திக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். தூத்துக்குடி மாவட்ட முன்னாள் சேர்மன் சத்யா உள்ளிட்ட 2 அதிமுக உறுப்பினர்கள் தேர்தலை புறங்கணித்தனர்.

முன்னதாக, கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தூத்துக்குடி மாவட்ட ஊராட்சியில் உள்ள 17 கவுன்சிலர் பதவிகளில் அதிமுக 12 இடங்களிலும், திமுக 5 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தது. தலைவர் பதவி பொது பெண் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், நடந்த மறைமுகத் தேர்தலில் அதிமுகவை சேர்ந்த 5-வது வார்டு உறுப்பினர் ஆர்.சத்யா தலைவராகவும், முல்லக்காடு செல்வக்குமார் துணைத் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, அதிமுகவை சேர்ந்த மாவட்ட கவுன்சிலர்கள் பலரும் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் தங்களை அதிகாரப்பூர்வமாக இணைத்துக் கொண்டனர். 

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஊராட்சி தலைவராக இருந்த சத்யா மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதில், 15 உறுப்பினர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். தலைவர் சத்யாவும், அவருக்கு ஆதரவான உறுப்பினர் ஒருவரும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இதையடுத்து தீர்மானம் நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது. இதனால் தூத்துக்குடி மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவியை ஆர்.சத்யா இழந்தார்.

இதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. இதில், திமுக மாணவரணி துணை அமைப்பாளர் உமரி சங்கரின் மனைவியான 15-வது வார்டு கவுன்சிலர் பிரம்மசக்தி புதிய மாவட்ட ஊராட்சி தலைவராக இன்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்