Palani Panchamirtham Issue: பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கு கொழுப்பு..வதந்தி பரப்பிய பாஜக நிர்வாகிகள் மீது புகார்
திருப்பதி லட்டு தயாரிக்க நெய் சப்ளை செய்த நிறுவனத்தின் தலைவர் பழனி அறங்காவலர் குழுவில் இருப்பதால் பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் இருப்பதாக வதந்தி பரப்பிய பாஜக நிர்வாகிகள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய் கலந்திருப்பதாக வெளியாக செய்தி நாடு முழுவதும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்த விவகாரம் அடங்குவதற்குள் தற்போது தமிழ்நாட்டில் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயலில் வழங்கப்படும் பஞ்சாமிர்தம் பிராசதத்திலும் விலங்கு கொழுப்பு கலக்கப்படுவதாக பாஜக நிர்வாகிகள் சர்ச்சையை கிளப்பியுள்ளனர்.
ஏ.ஆர்.ஃபுட்ஸ் நிறுவனம் தான் பழனி கோவிலுக்கும் நெய் விநியோகம் செய்யப்படுகிறது என்ற தவறான செய்தியை பரப்பிய பாரதிய ஜனதா கட்சி மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம் மற்றும் செல்வகுமார் மீது பழனி அடிவாரம் காவல் நிலையத்தில் கோவில் நிர்வாகம் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
பழனி பஞ்சாமிர்தம் குறித்து சர்ச்சை
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கபடும் லட்டு தயாரிப்பதற்கு திண்டுக்கல்லை சேர்ந்த ஏ ஆர் ஃபுட்ஸ் நிறுவனம் வழங்கிய நெய்யில் மாட்டுக் கொழுப்பு, பன்றி இறைச்சி கொழுப்பு, மீன் எண்ணெய் கலந்து கொடுக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இந்த விவகாரத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயலாளர் வினோத் பி செல்வம் மற்றும் பாஜக தொழில் பிரிவு துணைத் தலைவர் செல்வகுமார் ஆகியோர் தங்களது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை பகிர்ந்திருந்தனர்.