தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  நாங்குநேரி சம்பவம்..இது போன்ற அநீதி இனி நடவாமல் தடுப்போம் - மநீம கண்டனம்

நாங்குநேரி சம்பவம்..இது போன்ற அநீதி இனி நடவாமல் தடுப்போம் - மநீம கண்டனம்

Karthikeyan S HT Tamil
Aug 16, 2023 12:32 PM IST

Nanguneri Incident: பிறப்பினால் மனிதர்கள் அனைவரும் சமம்; மனிதர்களிடையே பாகுபாடு கடைபிடிப்பது இழிவானது எனும் சமூகப்பாடம்தான் முதன்மையாக கற்றுக்கொடுக்கப்பட வேண்டியது என்று மக்கள் நீதிமய்யம் தெரிவித்துள்ளது.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

ட்ரெண்டிங் செய்திகள்

அண்ணல் அம்பேத்கர் அவர்களும் கல்வி கற்கும்போது இதுபோன்ற கொடுமைகளை எதிர்கொண்டு பின்னர் மிகப்பெரிய உலகம் போற்றும் கல்வியாளராக ஆனார். அவரைப் போலவே இங்கே கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட இக் குழந்தைகள் உலகம் போற்றும் அளவிற்கு கல்வியாளராக வேண்டும். சாதிய ஏற்றத்தாழ்வுகளுக்கும், ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக அம்பேத்கரும், காந்தியும், பெரியாரும், நாராயண குருவும் இன்ன பிற தலைவர்களும் முன்னெடுத்த போரை நாம் அதே உக்கிரத்துடன் மீண்டும் தொடங்கியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். நாங்குனேரி விவகாரத்தின் தீவிரத்தன்மையை உணர்ந்து தமிழ்நாடு அரசு எடுத்த உடனடி நடவடிக்கைகள் ஆறுதல் அளிக்கின்றன.

பள்ளிகளில் பற்பல பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. பிறப்பினால் மனிதர்கள் அனைவரும் சமம்; மனிதர்களிடையே பாகுபாடு கடைபிடிப்பது இழிவானது எனும் சமூகப்பாடம்தான் முதன்மையாக கற்றுக்கொடுக்கப்பட வேண்டியது. பள்ளி மாணவர்கள் சாதி அடையாளக் கயிறு கட்டுவதும், தங்களது வாகனங்களில் சாதிப்பெயரை எழுதி வைத்துக்கொள்வதும், ஒரே சாதி மாணவர்கள் ஒரு குழுவாக சேர்ந்து சக மாணவர்களையே தாக்குவதும், போதைப் பொருட்களைப் பயன்படுத்துவதும் பல கல்விக்கூடங்களில் நடந்துகொண்டுதான் இருக்கின்றன என்பது கசப்பான உண்மை. இந்நிலை மாற அரசும், அதிகாரிகளும், கல்வி நிறுவனங்களும், பெற்றோரும், மாணவர்களும் ஒத்திசைந்து செயல்பட வேண்டியது அவசியம்.

சமூக முன்னேற்றத்திற்காகப் பாடுபடும் முற்போக்குச் சிந்தனையாளர்கள், அறிஞர்கள், கலைஞர்களை அழைத்து வந்து மாணவர்களிடம் உரையாடச் செய்யவேண்டும். சமூகநீதி தனிப்பாடப் பிரிவாக கற்றுக்கொடுக்கப்பட வேண்டும். மாணவர்களிடையே சமத்துவத்தை வளர்க்கக் கூடிய நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்பட்டு பள்ளிகளில் நடத்தப்பட வேண்டும். சாதிய பாகுபாடுகள் அதிகம் இருக்கும் பள்ளிகளில் ஒவ்வொரு மாணவனுக்கும் ஒரு சமூக ஆர்வலரை வழிகாட்டியாக (mentor) ஒருவரை பொறுப்பெடுக்கச் செய்யலாம். பொதுவெளியில், சமூக ஊடகங்களில் சாதிய வேறுபாட்டையும், வன்மத்தையும் விதைப்போர் மீது கடுமையான நடவடிக்கைகள் உடனுக்குடன் எடுக்கப்பட வேண்டும்." இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்