தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Mozhi Por Thiyagigal Day: ’தமிழுக்காக நெருப்புக்கு உடலை தந்த வீரன்!’ கீழப்பழூர் சின்னசாமி நினைவுநாள் இன்று!

Mozhi por Thiyagigal Day: ’தமிழுக்காக நெருப்புக்கு உடலை தந்த வீரன்!’ கீழப்பழூர் சின்னசாமி நினைவுநாள் இன்று!

Kathiravan V HT Tamil
Jan 25, 2024 04:45 AM IST

”சின்னச்சாமியின் மரணம் தமிழ்நாடு முழுவதும் இந்தி திணிப்புக்கு எதிரான அனலை கக்கத் தொடங்கியது”

மொழிப்போர் தியாகி கீழப்பழூர் சின்னசாமி மற்றும் மொழிப்போர் தியாகிகள்
மொழிப்போர் தியாகி கீழப்பழூர் சின்னசாமி மற்றும் மொழிப்போர் தியாகிகள்

ட்ரெண்டிங் செய்திகள்

ராஜாஜியின் இந்த உத்தரவுக்கு எதிராக தனித்தமிழ் இயக்கங்களும், பெரியாரும் கடும் போராட்டத்தை நடத்தினர். இந்த போராட்டத்தை எதிர்த்து போராடிய நடராசன், தாளமுத்து ஆகியோர் உயிர்நீத்த நிலையில் பிரச்னை பூதாகரமானது. எதிர்ப்பை புரிந்து கொண்ட ராஜாஜி அரசு இந்தி கட்டாய பாட அறிவிப்பை கைவிடுவதாக அறிவித்தது. 

நாடு விடுதலை பெற்றதற்கு பின்னர் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை வகுக்கும் பணிகள் தொடங்கிய போது,  இந்தி பேசாத மாநிலங்களுக்கு இந்தி மொழியை கற்க 15 ஆண்டுகள் அவகாசம் அளித்து பின்னர் இந்தியை ஆட்சி மொழியாக கொண்டு வரலாம் என்று முடிவு செய்யப்பட்டது. 

இதன்படி 1965ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி நாட்டின் ஆட்சி மொழியாக இந்தி அறிவிக்கப்படும் என்ற நிலை இருந்தது. இந்த அறிவிப்புக்கு திமுக மற்றும் பல்வேறு தமிழ் அமைப்புகள் மத்தியில் கடும் எதிர்ப்பு இருந்து வந்தது.  

அரியலூர் மாவட்டம் கீழப்பழூர் கிராமத்தை சேர்ந்த விவசாயியான சின்னசாமி என்பவர் தனது இளம் வயதில் இருந்தே சுயமரியாதை இயக்க பற்றோடு இருந்தார். திராவிட இயக்கம் மீது கொண்ட ஈடுபாட்டால் அவரது மகளுக்கு திராவிடச்செல்வி என பெயர் சூட்டினார். 

திருச்சி நகருக்கு வந்த சின்னசாமி புகைப்படம் ஒன்று எடுத்துவிட்டு அதில் தாம் உயிர்விடப்போவதாக கூறி தனது நண்பருக்கு கடிதம் அனுப்பினார். 1964ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி திருச்சி ரயில் நிலையத்தில் அதிகாலை தனது உடலில் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு ‘தமிழ்வாழ்க! இந்தி ஒழிக’ என முழக்கமிட்டபடி கட்டாய இந்தி திணிப்பை எதிர்த்து உயிர்த் தியாகம் செய்தார். 

சின்னச்சாமியின் மரணம் தமிழ்நாடு முழுவதும் இந்தி திணிப்புக்கு எதிரான அனலை கக்கத் தொடங்கியது. 1965ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி திருச்சியில் இந்தி திணிப்பு எதிர்ப்பு மாநாடு திருச்சியில் கூட்டப்பட்டது. பேரறிஞர் அண்ணா ஜனவரி 26ஆம் நாளான குடியரசு தினத்தை துக்கநாளாக அறிவித்தார். 

பின்னர் விருகம்பாக்கம் அரங்கநாதன், கீரனூர் முத்து, சாரங்கபாணி, வீரப்பன் உள்ளிட்டோர் தீக்குளித்து உயிரிழந்தனர். இன்னும் பலர் விஷம் குடித்தும், குண்டடிப்பட்டும் உயிர்நீத்தனர். 

தமிழ்நாட்டில் ஏற்பட்ட இந்தி திணிப்புக்கு எதிரான வீரியத்தை புரிந்து கொண்ட மத்திய காங்கிரஸ் அரசு கட்டாய இந்தி அறிவிப்பை கைவிடுவதாக அறிவித்தது. 

IPL_Entry_Point

டாபிக்ஸ்