Happy Doctor's Day : மக்களை மருத்துவர்களும், மருத்துவர்களை அரசும் காக்க வேண்டும் என்பதே மருத்துவர் தின கோரிக்கை
Happy Doctor's Day : மக்கள் நோயில்லாமல் வாழ வழி செய்வதே மருத்துவரின் பிரதான கடமையாகும். எனவே அதை உணர்ந்து மருத்துவர்கள் நடந்துகொள்ள வேண்டும், அரசும் அதற்கு பக்கபலமாக இருக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நோயாளிகள் தங்கள் சொந்த செலவிலிருந்து சுகாதாரத்திற்கு என்று செலவிடுவது 2017- 18ம் ஆண்டைவிட தற்போது கூடுதலாக செலவிடும் சூழல் உருவாகியுள்ளது.
2017-18ம் ஆண்டில் சொந்த செலவிலிருந்து, மாதத்திற்கு சுகாதாரத்திற்கு 10 சதவீதத்துக்கு மேல் செலவிடப்படும் குடும்பத்தினர் 3.3 சதவீதம் என இருந்தது. 25 சதவீதத்துக்கு மேல் செலவிடுவது 1.2 சதவீதம் குடும்பத்தினர் என இருந்தது. தற்போது, 2022 – 23ல் 10 சதவீதம் செலவிடுவது, 5.4 சதவீதம் எனவும், 25 சதவீதத்துக்கு மேல் செலவிடுவது 1.9 எனவும் அதிகரித்துள்ளது.
மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் பாதிப்பு சற்றுக் குறைவாக இருந்தாலும், 2017-18, 2022-23 ஆண்டுகளில் தனிநபர் செலவு அதிகரித்திருப்பதை குறைக்க அரசுக்கு மருத்துவர்கள் துணை நிற்க வேண்டும். அரசும் இதை குறைக்க உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
