Crime: மூடநம்பிக்கையால் பிறந்து 38 நாட்களே ஆன குழந்தையை கொன்ற தாத்தா! சித்திரை மாதம் பிறந்ததால் வெறிச்செயல்!
இந்த நிலையில் கடந்த ஜூன் 14ஆம் தேதி இரவு தாய் சங்கீதாவின் அருகே இருந்த பச்சிளம் குழந்தையை காலையில் காணவில்லை என்பதால் குடும்பத்தினர் அனைவரும் தேடி உள்ளனர். அப்போது வீட்டில் உள்ள தண்ணீர் பேரலில் துணி சுற்றப்பட்ட நிலையில் குழந்தை சடலமாக மீட்கப்பட்டது.

Crime: மூடநம்பிக்கையால் பிறந்து 38 நாட்களே ஆன குழந்தையை கொன்ற தாத்தா! சித்திரை மாதம் பிறந்ததால் வெறிச்செயல்!
சித்திரை மாதத்தில் பிறந்ததால் பிறந்து 38 நாட்களே ஆன ஆண் குழந்தையை தாத்தாவே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஜெயங்கொண்டம் அருகே அதிர்ச்சி சம்பவம்
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள உட்கோட்டை கிராமத்தில் வசிக்கும், வீரமுத்து என்பவரின் மகள் சங்கீதாவுக்கும், கும்பகோணம் அருகே வசிக்கும் பாலமுருகன் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்து உள்ளது.
சங்கீதா - பாலமுருகன் தம்பத்திக்கு கடந்த 38 நாட்களுக்கு முன் ஆண் குழந்தை ஒன்று பிறந்து உள்ளது. பின்னர் குழந்தை மற்றும் குழந்தையின் தாய் சங்கீதா ஆகியோர் தனது தந்தை வீடான உட்கோட்டை கிராமத்திற்கு சென்று உள்ளனர்.