தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Theni: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தாயார் உடல் நலக்குறைவால் மரணம்

Theni: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தாயார் உடல் நலக்குறைவால் மரணம்

Pandeeswari Gurusamy HT Tamil
Feb 24, 2023 10:36 PM IST

முன்னாள் முதல்வர் தாயார் மரணம்

தாயாருடன் ஓ.பன்னீர் செல்வம்
தாயாருடன் ஓ.பன்னீர் செல்வம்

ட்ரெண்டிங் செய்திகள்

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் (95) உடல்நலக் குறைவு காரணமாக தேனி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் , சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் 95 வயது நிரம்பிய பழனியம்மாள் நாச்சியார். இவர் நேற்று முன்தினம் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து பெரியகுளத்தில் இருந்து தேனி என்.ஆர்.டி நகரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஓ.பன்னீர்செல்வம் நேற்று தேனியில் உள்ள மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரது தாயாரை பார்த்து வந்தார். அவரது உடல்நிலை குறித்தும் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டு விசாரித்தார். தொடர்ந்து ஓபிஎஸ் தாயாருக்கு மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி பழனியம்மாள் சற்று முன் மரணம் அடைந்தார். தாயார் மறைவு செய்தி கேட்டறிந்த ஓ.பன்னீர் செல்வம் அவசர அவசரமாக சென்னையிலிருந்து தேனிக்கு புறப்பட்டு பெரியகுளம் கிளம்பி உள்ளார்.

அவரது இறுதி சடங்குகள் குறித்த விபரங்கள் காலையில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.

இதையடுத்து பன்னீர் செல்வத்தின் தாயார் மறைவிற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்