Fact Check: தமிழ்நாட்டின் முதல் பெண் விமானி காவ்யா மாதவன் என்று வைரலாகும் புகைப்படம் உண்மையா? - விபரம் இதோ..!
Fact Check: தமிழ்நாட்டின் முதல் பெண் விமானி காவ்யா மாதவன் என்று சமூகவலைத்தளங்களில் புகைப்படத்துடன் தகவல் ஒன்று வைரலாகி வருகிறது. இதன் உண்மைத் தன்மை குறித்து பார்ப்போம்.

தமிழ்நாட்டின் முதல் பெண் விமானி காவ்யா மாதவன் என்றும் அவருக்கு வாழ்த்துக்கள் கூறியும் சமூகவலைத்தளங்களில் பெண் விமானி ஒருவரின் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
வைரல் பதிவு
வைரல் புகைப்படத்தின் உண்மை தன்மையை கண்டறிய புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தபோது, 2016 ஆம் ஆண்டு Yuva Desam என்ற பேஸ்புக் பக்கத்தில், " இவர் கேரளாவின் திருச்சூரைச் சேர்ந்த காயத்ரி சுப்ரான். இந்திய விமான வரலாற்றின் முதல் பெண் தலித் விமானி." என்று குறிப்பிடப்பட்டிருந்ததது.
முதல் தலித் பெண் விமானி?
தொடர்ந்து, முதல் தலித் பெண் விமானி குறித்து கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது, Times of India மற்றும் Bangalore Mirror, "21 ஆண்டுகளுக்கு பிறகு வணிக விமானி உரிமம் பெற்ற மதுரையைச் சேர்ந்த பெண்." என்று 2018 ஆம் ஆண்டு செய்தி வெளியிட்டிருந்தன. அதன்படி, தமிழ்நாடு போக்குவரத்து கழக ஓட்டுனரான ரவிக்குமார் என்பவரது மகள் காவ்யா (22) வணிக விமானி உரிமம் பெற்ற பின்னர் தனது சொந்த ஊருக்கு வருகை தந்தார் என்று கூறப்பட்டிருந்தது.
