Coimbatore: கோவை மேயர் கல்பனா நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன் ராஜினாமா ஏற்பு.. அடுத்த மேயர் யார்
Coimbatore: கோவை மாநகராட்சியின் முதல் பெண் மேயராக தேர்ந்தெடுக்கப்ட்ட கல்பனா ஆனந்த குமார் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் நெல்லை மாநகராட்சி மேயர் சரவணனின் ராஜினாமா கடிதமும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

Coimbatore: கோவை மாநகராட்சியின் முதல் பெண் மேயராக தேர்ந்தெடுக்கப்ட்ட கல்பனா ஆனந்த குமார் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் நெல்லை மாநகராட்சி மேயர் சரவணனின் ராஜினாமா கடிதமும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சியில் மொத்தம் நூறு கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் 97 பேர் திமுக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர். மேலும் மூன்று பேர் அதிமுக கவுன்சிலர்கள். கோவை மாநகராட்சி மேயராக திமுகவைச் சேர்ந்த கல்பனா ஆனந்தகுமார் இருந்து வந்தார். இவர் மாநகராட்சி தேர்தலில் கோவையில் 19ஆவது வார்டில் வெற்றி பெற்று கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவரது கணவர் ஆனந்தகுமார் திமுகவில் பொறுப்புக் குழு உறுப்பினராக உள்ளார். இந்நிலையில் மேயர் கல்பனா பொறுப்பேற்றது முதல் அவர் மீது பல புகார்கள் எழுந்தது. இதற்கு அவரது கணவர் ஆனந்த குமாரின் தலையீடு மிக முக்கிய காரணம் என்று திமுக வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டது.