சென்னையில் போக்குவரத்து விதிமீறல்: ஒரே மாதத்தில் மட்டுமே இவ்ளோ வசூல்!
Traffic Violations: சிறப்பு வாகன தணிக்கையின் மூலம் மோட்டார் வாகன விதிகளின் கீழ் நிலுவையில் உள்ள சுமார் 15,000 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், மோட்டர் வாகன சட்டத்தை திறம்பட அமல்படுத்துவதன் மூலமும், விழிப்புணர்வு பிரச்சாரங்களை ஏற்பாடு செய்வதன் மூலமும் சாலை போக்குவரத்து விபத்துகளில் ஏற்படும் விபத்து மற்றும் இறப்பு விகிதத்தை குறைக்க சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் கடுமையான முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.
சென்னை பெரு நகரத்தில் பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களுக்காக சராசரியாக 6000க்கும் மேற்பட்ட வழக்குகள் தினசரி பதிவு செய்யப்படுகின்றன. இருப்பினும் சில விதிமீறல் செய்பவர்கள் அபராதத் தொகையை சரியான நேரத்தில் செலுத்துவதில்லை. எனவே 11.04.2022 அன்று பெருநகரத்தில் 10 அழைப்பு மையங்களை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் விதி மீறி அபராதம் செலுத்தாதவர்களை தொலைபேசியின் மூலம் கடந்த 2022 ஆண்டு விதிமீறல் செய்து அபராதம் செலுத்தாதவர்களை தொலைபேசியில் அழைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த விழிப்புணர்வு மூலம் உரிய பதில் கிடைக்காததால் 09.02.2023 அன்று 159 இடங்களில் திடீர் வாகன சோதனை நடத்தப்பட்டது. இதில் 9,523 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ஆன்லைன் கட்டணம் மூலம் ரூ.28,82,270 அபராதம் வசூலிக்கப்பட்டது.
