Vikravandi By Election: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளர் அறிவிப்பு
Vikravandi By Election: இடைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் பாமக போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளராக மாநிலத் துணைத் தலைவர் சி. அன்புமணி அவர்கள் போட்டியிடுவார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளர் அறிவிப்பு
Vikravandi By Election: விக்கிரவாண்டி சட்டபேரவை தொகுதியில் நடைபெறும் இடைத் தேர்தலில் சி. அன்புமணி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுளளதாவது,
" விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு வரும் ஜூலை 10 ஆம் நாள் நடைபெறவுள்ள இடைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளராக மாநிலத் துணைத் தலைவர் சி. அன்புமணி அவர்கள் போட்டியிடுவார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்." இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.