’நிச்சயதார்த்தம் செய்த பிறகு திருமணம் செய்ய மறுக்கிறார்’ இளம்பெண் தற்கொலை முயற்சி!
கிருஷ்ணகிரியில் திருமணம் செய்து கொள்வதாக கூறி நிச்சயதார்த்தம் செய்த பிறகு ஏமாற்றுவதாக கூறி இளம் பெண் இரண்டாவது மாடியில் இருந்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரியை சேர்ந்தவர் குணசேகரன்(30). இவர் பழைய பெங்களூர் சாலையில் பைனான்ஸ் மற்றும் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் திருமணத்திற்காக பெண் தேடி வந்துள்ளார். அப்போது திருமண மேட்ரிமோனி மூலமாக சென்னை கூடுவாஞ்சேரியை சேர்ந்த அஸ்வினி (26) என்கிற பெண்ணை பார்த்துள்ளார்.
பின்னர் இருவரும் பேசி பழகி வந்துள்ளனர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் குணசேகரன்- அஸ்வினி ஆகிய இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து பெற்றோர் உறவினர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் செய்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று மாலை கிருஷ்ணகிரி பெங்களூர் பழைய சாலையில் குணசேகரன் நடத்திவரும் நிதி நிறுவனம் மற்றும் டிராவல்ஸ் அலுவலகம் முன்பு இரண்டாவது தளத்தில் உள்ள பாதுகாப்பு சுவர் மீது அமர்ந்து கொண்டு அஸ்வினி தற்கொலை செய்து கொள்வதாக போராட்டத்தில் ஈடுபட்டார்.