Jallikattu 2024: மது போதையில் மாடுபிடிக்க முயற்சி! 4 பேரை தூக்கி அடித்த ஜல்லிக்கட்டு குழு! பாலமேட்டில் பரபரப்பு!
”பாலமேடு ஜல்லிக்கட்டில் 1000 காளைகளும், 700 வீரர்களும் கலந்து கொண்டுள்ளனர்”

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள்
மது அருந்திவிட்டு ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க முயன்றதாக 4 வீரர்கள் உட்பட 7 பேரை தகுதி நீக்கம் செய்து பாலமேடு ஜல்லிக்கட்டு குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
பொங்கல் திருநாளையொட்டி மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டியை பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.
மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்து முடிந்த நிலையில் பாலமேட்டில் இன்றும், அலங்காநல்லூரில் நாளையும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது.