Paris Olympics: வில்வித்தை விளையாட்டில் ஒலிம்பிக் பதக்க வறட்சி..முழு பலத்துடன் களமிறங்கும் இந்தியா வில்வித்தை வீரர்கள்
2012 லண்டன் ஒலிம்பிக்கு பிறகு, தற்போது நடைபெற இருக்கும் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா முழு வலிமை கொண்ட வில்வித்தை அணியுடன் களமிறங்குகிறது. ஒலிம்பிக் பதக்க வறட்சியை போக்கும் விதமாக முழு பலத்துடன் இந்தியா வில்வித்தை வீரர்கள் சாதிக்க தயாராக இருக்கிறார்கள்.
உலக அளவில் பல்வேறு பதக்கங்களை வில்வித்தை விளையாட்டில் வென்று சாதித்தபோதிலும், ஒலிம்பிக் பதக்கமானது கனவாகவே இருந்து வருகிறது. இந்திய வில்விதை ஒலிம்பிக் பதக்க வறட்சி வரும் பாரிஸ் ஒலிம்பிக்கில் காணாமல் போகும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
2012 லண்டன் ஒலிம்பிக்கு பிறகு, தற்போது நடைபெற இருக்கும் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா முழு வலிமை கொண்ட வில்வித்தை அணியுடன் களமிறங்குகிறது. ஒலிம்பிக் பதக்க வறட்சி போக்கும் விதமாக முழு பலத்துடன் இந்தியா வில்வித்தை வீரர்கள் சாதிக்க தயாராக இருக்கிறார்கள்.
2024 பாரிஸ் ஒலிம்பிக்கின் தொடக்க விழா வரும் சனிக்கிழமை நடக்கவுள்ளது. ஆனால் அதற்கு ஒரு நாள் முன்னதாகவே இந்திய வில்வீரர்கள் ஆரம்பகட்ட போட்டிகளில் பங்கேற்கிறார்கள். இந்திய வில்வித்தை விளையாட்டு நட்சத்திரங்களாக இருக்கும் தீபிகா குமாரி, அங்கிதா பகத், பஜன் கெளர், பிரவின் ஜாதவ், தருண்தீப் ராய் மற்றும் தீரஜ் பொம்மதேவாரா ஆகியோர் பெண்கள் மற்றும் ஆண்கள் தனிநபர் தரவரிசை சுற்றுகளில் வெள்ளிக்கிழமை களமிறங்க இருக்கிறார்கள்.