தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Hbd Manoj Kumar: காமன்வெல்த்தில் தங்கம் வென்று அசத்திய குத்துச்சண்டை வீரர் மனோஜ் குமாரின் பிறந்த நாள்

HBD Manoj Kumar: காமன்வெல்த்தில் தங்கம் வென்று அசத்திய குத்துச்சண்டை வீரர் மனோஜ் குமாரின் பிறந்த நாள்

Manigandan K T HT Tamil
Dec 10, 2023 06:10 AM IST

மனோஜ் குமார் 2008 இல் நடப்பு சாம்பியனான சோம் பகதூர் புனை தோற்கடித்ததன் மூலம் முதல் முறையாக தேசிய சாம்பியனானார்.

குத்துச்சண்டை வீரர் மனோஜ் குமார்
குத்துச்சண்டை வீரர் மனோஜ் குமார் (@Ra_THORe)

ட்ரெண்டிங் செய்திகள்

அவரது தந்தை ஷேர் சிங் இந்திய இராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர், அவரது தாயார் ஒரு இல்லத்தரசி. மனோஜ் குமார்   ஆரம்பத்தில் ஒரு தடகள வீரராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார், அதே நேரத்தில் அவரது மூத்த சகோதரர் ராஜேஷ் குமார் ராஜவுண்ட் ஒரு வளர்ந்து வரும் குத்துச்சண்டை வீரராக இருந்தார். ராஜேஷ் குமார் ராஜவுண்ட் பல்கலைக்கழக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றபோது அவர் தேசிய அணிக்கு தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்த்தார். இருப்பினும் அவர் புறக்கணிக்கப்பட்டார், எனவே அவரது தம்பியை குத்துச்சண்டைக்கு கொண்டு வர முடிவு செய்தார். 

அவர் மனோஜ் குமாருக்கு பயிற்சி அளிக்கத் தொடங்கினார், மேலும் அவரது இளைய சகோதரர் முகேஷ் குமாரை ஜூடோவில் இருந்து குத்துச்சண்டைக்கு மாற்றி மனோஜ் குமாரின் ஸ்பாரிங் பார்ட்னராக மாற வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மூவரும் தங்கள் கிராமமான ராஜவுண்டில் இருந்து கைதலுக்குப் பயிற்சிக்காகப் பயணம் செய்தனர். ஆரம்ப காலத்தில் பழைய சைக்கிள் டியூப்கள் மூலம் பயிற்சி பெற்றனர்.

மனோஜ் குமார் 2008 இல் நடப்பு சாம்பியனான சோம் பகதூர் புனை தோற்கடித்ததன் மூலம் முதல் முறையாக தேசிய சாம்பியனானார். அதன் பிறகு மனோஜ் குமார் பயணம் வெற்றிகரமாக அமைந்தது. 2010 காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்.

2011 ஆம் ஆண்டு அசர்பைஜானின் பாகுவில் நடந்த உலக அமெச்சூர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் மனோஜ் குமார் 18-24 என்ற கணக்கில் டாம் ஸ்டால்கரிடம் தோற்று காலிறுதியை அடைந்தார். முன்னதாக போட்டியில், குமார் 17-11 என்ற கணக்கில் பஹாமாஸின் வாலண்டினோ நோல்சையும், 19-7 என்ற கணக்கில் அயர்லாந்தின் ரே மொய்லெட்டையும், சீனாவின் ஹு கிங்கை 17-15 என்ற கணக்கில் தோற்கடித்தார். 

லண்டன் ஒலிம்பிக்ஸில் பங்கேற்ற மனோஜ் குமாரால் பதக்கம் எதுவும் வெல்ல முடியாமல் போனது சோகமே.

2014 ஆம் ஆண்டு இந்திய அரசால் அவருக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது. தொடக்கத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் தலைமையிலான தேர்வுக் குழுவால் அர்ஜுனா விருதுக்கு அவர் பரிசீலிக்கப்படவில்லை. இருப்பினும், அவரது பயிற்சியாளர் ராஜேஷ் குமார் ராஜவுண்ட் 26 ஆகஸ்ட் 2014 அன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் தேர்வுக் குழுவிற்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். அர்ஜுனா விருதுக்கு மனோஜ் மிகவும் தகுதியான விளையாட்டு வீரர் என்றும், தேர்வுக் குழு அவரை புறக்கணித்ததாகவும் ராஜேஷ் கூறினார். டெல்லி உயர்நீதிமன்றம் அவரது மனுவை ஏற்றுக்கொண்டது மற்றும் அனைத்து உண்மைகளையும் பார்த்த பிறகு மனோஜ் குமாருக்கு "அர்ஜுனா விருது" வழங்கி கவுரவிக்குமாறு அரசுக்கு உத்தரவிட்டது.

WhatsApp channel

டாபிக்ஸ்