Madurai Panthers: த்ரில் வெற்றி.. பிளே-ஆஃப் சுற்றில் மதுரை: திருப்பூர் போராடி தோல்வி
மதுரை பேந்தர்ஸ் அணி சிறப்பாக விளையாடி த்ரில் வெற்றி பெற்றது. 4வது அணியாக குவாலிஃபையர் சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தது.

திருப்பூர், மதுரை வீரர்கள்
ஸ்ரீராம் கேபிட்டல் தமிழ்நாடு பிரீமியர் லீக் 2023 சீஸனில் திருநெல்வேலி இந்தியா சிமெண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் 27வது போட்டியில் ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் வெற்றி பெற சீகம் மதுரை பேந்தர்ஸ் 20 ஓவர்களில் 161 ரன்களை நிர்ணயித்தது.
சேஸிங்கில் சிறப்பாக செயல்பட்ட திருப்பூர் அணி, கடைசி வரை போராடியது. எனினும், 4 ரன்கள் வித்தியாசத்தில் மதுரை வெற்றி பெற்றது.
குர்ஜப்னீத் சிங், அஜய் கிருஷ்ணா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். முருகன் அஸ்வின், சரவணன் ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.
