Cristiano Ronaldo: ரசிகர்களை நோக்கி ஆபாச செய்கை! சாதனை கோல் அடித்து சோதனையில் சிக்கிய ஸ்டார் வீரர் ரொனால்டோ
சவுதி புரோ கால்பந்து லீக்கில் ரசிகர்களை நோக்கி கால்பந்து வீரர் ரெனால்டா வெளிப்படுத்திய செய்கை அதிர்ச்சியை ஏற்படுத்துவிதமாக அமைந்ததோடு, அவரது கால்பந்து கேரியரில் வெளிப்படுத்திய மோசமான நிகழ்வாக அமைந்தது.
சவுதி புரோ கால்பந்து லீக் தொடரில் கிறிஸ்டியானோ ரொனால்டோ (REUTERS)
போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த கிறஸ்டியானோ ரொனால்டோ கால்பந்து உலகின் நட்சத்திர வீரராக உள்ளார். உலக அளவில் அதிக ரசிகர்களை கொண்டிருக்கும் கால்பந்து வீரராக இருந்து வரும் ரொனால்டோ, பல்வேறு நாடுகளில் கால்பந்து லீக்குகளில் விளையாடி வருகிறார்.
சவுதி அரேபியாவில் நடைபெற்று வரும் சவுதி புரோ கால்பந்து லீக் தொடரில் அல் நசர் அணிக்காக விளையாடி வருகிறார் ரெனால்டோ. அல் நசர் - அல் ஷபாப் அணிகளுக்கு இடையிலான முக்கியத்துவம் மிக்க லீக் போட்டியில் தனது சிறப்பான ஆட்டத்தால் அணிக்கு வெற்றியை தேடி தந்தார்.
கட்டாய வெற்ற பெற்றாக வேண்டிய போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் அல் நசர் அணி வென்றது. இந்த போட்டியில் கோல் அடித்த ரொனால்டோ உள்ளூர் கால்பந்து லீக் போட்டிகளில் 750வது கோல் அடித்து புதிய மைல்கல் சாதனையை எட்டினார்.