PCI suspension row: இந்திய பாராலிம்பிக் குழு சஸ்பெண்ட்: பிரதமருக்கு தீபா மாலிக் வேண்டுகோள்
சனிக்கிழமையன்று, சரியான நேரத்தில் தேர்தலை நடத்தத் தவறியதற்காகவும், வழிகாட்டுதல்களுக்கு இணங்காததற்காகவும் பிசிஐயை இந்திய விளையாட்டு அமைச்சகம் இடைநீக்கம் செய்தது.

பாராலிம்பிக் முன்னாள் வீராங்கனை தீபா மாலிக். (ANI Photo/Shrikant Singh) (Shrikant Singh)
இந்திய பாராலிம்பிக் கமிட்டியின் (பிசிஐ), இடைநீக்க முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய விளையாட்டு அமைச்சர் அனுராக் தாக்கூர் மற்றும் இந்திய விளையாட்டு அமைச்சகம் ஆகியோருக்கு வேண்டுகோள் விடுத்தார் அதன் தலைவர் தீபா மாலிக். துப்பாக்கி சுடுதல் பாரா உலகக் கோப்பை தேசிய தலைநகரில் மார்ச் 7 முதல் 15 வரை நடைபெற உள்ளது.
சனிக்கிழமையன்று, சரியான நேரத்தில் தேர்தலை நடத்தத் தவறியதற்காகவும், வழிகாட்டுதல்களுக்கு இணங்காததற்காகவும் பிசிஐயை இந்திய விளையாட்டு அமைச்சகம் இடைநீக்கம் செய்தது.
தேர்தல் செயல்முறை ஏற்கனவே தொடங்கிவிட்டதால், மார்ச் 28, 2024 என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், பிரதமர் மோடி மற்றும் விளையாட்டு அமைச்சகம் தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தீபா வேண்டுகோள் விடுத்தார்.