Fifa world cup 2022:பிரேசிலை வெளியேற்றிய குரோஷியா! கண்ணீருடன் விடைபெற்ற நெய்மார்
ஜாம்பவான் அணியான பிரேசிலுக்கு இணையாக ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது குரோஷியா. பின் பெனால்டி ஷூட் அவுட்டில் கிடைத்த அனைத்து வாய்ப்புகளையும் கோலாக்கி அரையிறுதிக்கு நுழைந்தது குரோஷியா.

பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதி போட்டிகளில் தொடங்கியுள்ளன. இதில் முதல் காலிறுதி போட்டி 5 முறை சாம்பியனான பிரேசில் - கடந்த உலகக் கோப்பையில் அரையிறுதி வரை தகுதி பெற்ற குரோஷியா அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி அரையிறுதிக்குள் நுழையும் என்பதால் ஆட்டம் மிகவும் பரபரப்பாகவே நடைபெற்றது.
இருஅணிகளும் மிகவும் ஆக்ரோஷமாக விளையாடி வந்த நிலையில், கோல் அடிக்கும் முயற்சியில் மாறி மாறி ஈடுபட்டனர். ஆனால் இரு அணி வீரர்களின் சிறப்பான தடுப்பாட்டம் மூலம் அவை நிகழாமலேயே போனது.
முதல் பாதி வரை இரு அணிகளும் கோல் அடிக்காத நிலையில் இரண்டாவது பாதி ஆட்டத்தை தொடர்ந்தது. அப்போது கோல் முயற்சியானது பலன் அளிக்காமலேயே போனது. பல்வேறு வாய்ப்புகள் பிரேசில், குரோஷியா அணிகளுக்கு கூடி வந்த போதிலும் கோலாக மாற்ற முடியாமல் போனது. இதனால் முழு ஆட்ட நேர முடிவில் ஒரு கோல் கூட அடிக்காமல் இரு அணிகளும் சமநிலையில் இருந்தன.
