Arvind Kejriwal: மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்! முதல்வராக தொடர்வது குறித்தும் உத்தரவு
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றம், அமலாக்கத்துறை கைது தொடர்பான சட்ட கேள்விகளை பெரிய அமர்வுக்கு மாற்றியது. அவர் முதல்வராக தொடர்வது குறித்தும் உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் (HT_PRINT)
கலால் கொள்கை ஊழல் வழக்கில், அமலாக்கத்துறை தொடர்ந்த பண மோசடி வழக்கில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது.
முதலமைச்சராக தொடர வேண்டுமா என்பதை கெஜ்ரிவால் தான் முடிவு செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
இடைக்கால ஜாமீன்
இந்த மனுவை நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, திபாங்கர் தத்தா அமர்வு விசாரித்தது. இந்த வழக்கில் கெஜ்ரிவால் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் பிரிவு 19-ன் நிபந்தனைகளை பூர்த்தி செய்யாததன் மூலம் கெஜ்ரிவாலை கைது செய்ததில் அமலாக்கத்துறை தவறு செய்திருப்பதாக குற்றம் சாட்டினார்.