PM Modi: நிலவில் சந்திரயான் 3 லேண்டர் இறங்கிய இடத்துக்கு பெயர் வைத்த பிரதமர் மோடி!
பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்திற்கு நேரில் சென்று பிரதமர் நரேந்திர மோடி விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்தார்.

கிரீஸ் நாட்டில் இருந்து நேரடியாக பெங்களூரு இஸ்ரோ மையத்திற்கு வந்த பிரதமர் மோடி, விஞ்ஞானிகளை சந்தித்து அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ சார்பில் விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான்-3 விண்கலம் கடந்த 23ம் தேதி வெற்றிகரமாக நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கியது. சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்து லேண்டர் நிலவில் நேற்று தரையிறங்கியது. பின்னர், அதில் இருந்து ரோவர் வெளியே வந்து ஆய்வு பணிகளை தொடங்கி உள்ளது. லேண்டரில் உள்ள அனைத்து ஆய்வு கருவிகளும் செயல்படத் தொடங்கி இருப்பதாக இஸ்ரோ தெரிவித்திருந்தது.
சந்திரயான்-3 விண்கலம் நிலவில் தரையிறங்கிய போது, பிரதமர் நரேந்திர மோடி தென் ஆப்பிரிக்காவில் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் இருந்த நிலையில், இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்திருந்தார்.