Mahatma Gandhi Memorial Day: காந்தியை பற்றி வெளி உலகிற்கு தெரியாத டாப் 10 உண்மைகள்!
”Martyrs' Day 2024: மூன்று தோட்டாக்கள் மகாத்மாவின் மார்பை துளைத்தன. சம்பவ இடத்திலேயே மகாத்மா இறந்தார். இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட கோட்சேவுக்கு நவம்பர், 1949ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது”

மகாத்மா காந்தி (X)
ஜனவரி 30, 1948 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தனது பேத்திகளுடன் டெல்லியில் உள்ள பிர்லா பவனில் ஒரு மாலை பிரார்த்தனை கூட்டத்தில் உரையாற்றுவதற்காகச் சென்று கொண்டிருந்தார். மாலை 5:17 மணியளவில், இந்து தேசியவாதியான நாதுராம் கோட்சே என்பவர் மகாத்மா காந்தியை சுட்டார்.
மூன்று தோட்டாக்கள் மகாத்மாவின் மார்பை துளைத்தன. சம்பவ இடத்திலேயே மகாத்மா இறந்தார். இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட கோட்சேவுக்கு நவம்பர், 1949ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
மகாத்மா காந்தியைப் பற்றி அதிகம் அறியப்படாத சில உண்மைகள் இங்கே:
டைம் இதழின் மரியாதை
1930 ஆம் ஆண்டில், டைம் இதழின் ஆண்டின் சிறந்த மனிதர் என்ற பட்டத்தை மகாத்மா காந்தி பெற்றார். இந்த சிறப்பைப் பெற்ற முதல் மற்றும் ஒரே இந்தியர் மகாத்மா காந்திதான் என்பது குறிப்பிடத்தக்கது.