EPFO: ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் ஊதிய உச்ச வரம்பு உயர்வா?: ரூ.21,000 ஆக உயர்த்த மத்திய அரசு முடிவு என தகவல்
EPFO: ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் ஊதிய உச்ச வரம்பு உயர்வா? என்பது குறித்தும், ரூ.21,000 ஆக உயர்த்த மத்திய அரசு முடிவு எனத் தகவல் வெளியாகியுள்ளது.

EPFO: ஒவ்வொரு அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களின் நிதிப் பாதுகாப்புக்கும் வழிவகை செய்யும் வகையில் வருங்கால அமைப்பு நிதி அமைப்பு செயல்பட்டு வருகிறது.
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO - Employees Provident Fund Organisation) மற்றும் ஊழியர்களின் ஓய்வூதிய திட்டத்திற்கு (EPS - Employee Pension Scheme) சந்தாதாரர்கள் செலுத்தும் பங்களிப்புகளின் வரம்பை உயர்த்த அரசு நினைக்கிறது என்று மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை சொன்னதாக, பைனான்சியல் எக்ஸ்பிரஸ் செய்தியறிக்கை விட்டுள்ளது.
ஊழியர்களின் பங்களிப்புக்கான தற்போதைய ஊதிய உச்சவரம்பு ரூ.15,000 (2014ஆம் ஆண்டில் ரூ.6,500 ஆக இருந்தது) என்னும் வைப்பு நிதி, இனிவரும் காலங்களில் உங்கள் வருங்கால வைப்புநிதியில் அதிகம் பிடிக்கப்படலாம். இதன்மூலம், வருங்கால வைப்பு நிதி அதிகமாக முதலீடு செய்யப்படலாம் என அறிக்கை தெரிவித்துள்ளது.