HTLS 2022 :6% அதிகமான பணவீக்கம் இந்திய பொருளாதாரத்திற்கு ஆபத்து- சக்திகாந்த தாஸ்
6 சதவீததிற்கும் அதிகமான பணவீக்கம் இந்தியாவின் இந்திய பொருளாதாரத்திற்கு ஆபத்து விளைவிக்கும் என ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ்
ஹிந்துஸ்தான் டைம்ஸ் சார்பில் நடைபெற்று வரும் தலைவர்கள் உச்சிமாநாடு 2022இன் ஐந்தாம் நாள் நிகழ்ச்சியில் இன்று இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், ”பணவீக்கம் 4 சதவீதம் முதல் 6 சதவீதம் வரை இருக்கும் பட்சத்தில் நாணயக் கொள்கை மூலம் இந்திய பொருளாதாரத்திற்கு உதவ முடியும். ஆனால் 6 சதவீதத்திற்கு மேல் பணவீக்கம் இருந்தால் இந்திய பொருளாதாரத்திற்கு ஆபத்து என மேற்கோள் காட்டி பேசினார்.
அக்டோபர் மாதத்திற்கான பணவீக்கம் அடுத்த வாரம் வெளியிடப்படும். அது 7 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.